'அன்று தடுக்கவில்லை என்றால் ராகுல் இப்போது தப்பியிருப்பார்'

'அன்று தடுக்கவில்லை என்றால் ராகுல் இப்போது தப்பியிருப்பார்'

2 mins read
baed18bf-f3a8-47d3-a42e-6151a0313a57
-

புது­டெல்லி: ராகுல் காந்­தி­யின் தகு­தி­நீக்­கத்­திற்கு அவ­ரின் கர்­ம­வினை கார­ண­மாக இருக்­க­லாம் என்று அசாம் முதல்­வர் கூறி­யுள்­ளார்.

அசாம் மாநில முதல்­வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கவு­ஹாத்­தி­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

அப்­போது, "நீதி­மன்­றத்­தால் குற்­ற­வாளி என அறி­விக்­கப்­படும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், உட­னடி தகுதி நீக்­கம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ராக 2013ல் மன்­மோ­கன் சிங் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு அரசு அவ­சர சட்ட மசோ­தாவை முன்­மொ­ழிந்­தது.

"அப்­போது அந்த அவ­சர சட்ட மசோ­தவை ராகுல் காந்­தியே கிழித்­துப் போட்­டார். அவ­ரு­டைய கர்­ம­வினை அவ­ரைத் திருப்­பித் தாக்­கி­யி­ருக்­க­லாம். அதில் என்ன தவறு இருக்­கிறது," என்று வினவினார்.

2013ல் கொண்டு வரப்­பட்ட அந்த மசோ­தவை ராகுல் தடுத்து நிறுத்­தா­மல் இருந்­தி­ருந்­தால், இப்­போது அவர் உட­ன­டி­யாக தகு­தி­நீக்­கம் செய்­யப்­பட்­டி­ருக்க மாட்­டார் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­களும் கரு­து­கின்­ற­னர்.

இது தொடர்­பாக காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே கூறு­கை­யில், "ராகுல் காந்­தியை தகுதி நீக்­கம் செய்ய பாஜக அனைத்து வழி­க­ளி­லும் முயன்­றது. உண்மை பேசு­ப­வர்­களை வைத்­தி­ருக்­கும் பழக்­கம் பாஜ­க­வுக்கு கிடை­யாது.

"ஆனால் நாங்­கள் தொடர்ந்து உண்­மையைப் பேசு­வோம். அவ­சி­ய­மெ­னில் நாங்­கள் சிறைக்கு செல்­ல­வும் தயங்க மாட்­டோம்," என்று கூறி­யுள்­ளார்.

இது­கு­றித்து டுவிட் செய்­துள்ள, ராகு­லின் சகோ­தரி பிரி­யங்கா, "பாஜக முதல்­வர்­களில் ஒரு­வர் ராகுல்­காந்­தி­யின் தந்தை யார்? என்று கேட்­கி­றார். அவ­ருக்கு எந்த நீதி­ப­தி­யும் 2 ஆண்டு சிறைத்­தண்­டனை அளிக்­க­வில்லை. தகு­தி­நீக்­கம் செய்­ய­வில்லை. ராகுல்­காந்தி உண்­மை­யான தேச­பக்­தர்.

"அதா­னி­யின் கொள்ளை பற்­றி­யும் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகி­யோர் பற்­றி­யும் கேள்வி எழுப்­பி­யதை உங்­க­ளால் பொறுத்­துக் கொள்ள முடி­ய­வில்லை.

"எங்­கள் குடும்­பம் இந்­திய மக்­க­ளுக்­காக குரல் எழுப்­பி­யது. உண்­மைக்­காகப் போரா­டி­யது. உங்­க­ளைப் போன்ற ஒரு கோழைத்­த­ன­மான, சர்­வா­தி­காரி முன்பு எங்­கள் குடும்­பம் ஒரு­போ­தும் அடி­ப­ணி­யாது," என்று கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, 2018ல் தம்மை அவ­தூ­றாக பேசிய மோடி­மீது வழக்­குத் தொடரப் போவ­தாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் ரேணுகா சவுத்ரி கூறி­யுள்­ளார்.

"2018ல் நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய பிர­த­மர் மோடி, ராமா­ய­ணத்­தில் வரும் சூர்ப்­ப­ன­கை­யுடன் என் சிரிப்பை ஒப்­பிட்டு பேசி­னார்; இது­வும் அவ­துா­று­தான்," என்றார் அவர்.