தவறுதலாக வயல்களில் விழுந்த ஏவுகணைகள்

தவறுதலாக வயல்களில் விழுந்த ஏவுகணைகள்

1 mins read
d39c155e-d3be-417e-b704-58fc3d2a1bfd
-

பொக்­ரான்: ராஜஸ்­தான் மாநி­லம் பொக்­ரா­னில் உள்ள ஜெய்­சல்­மார் பகு­தி­யில் இந்­திய ராணுவ வீரர்­கள் ஏவு­க­ணை­களை பாய்ச்­சும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அப்­போது அங்­கி­ருந்து மூன்று ஏவு­க­ணை­கள் விண்­ணில் செலுத்­தப்­பட்­டன. தொழில்­நுட்பக் கோளாறு கார­ண­மாக இந்த ஏவு­கணை­கள் விண்­ணில் பாதை மாறி எல்­லைக்கு அப்­பால் சென்று அங்­கி­ருந்த கிரா­மங்­களில் உள்ள வயல்­வெளி பகு­தி­யில் விழுந்து நொறுங்­கி­ன.

பயிற்­சி­யின்­போது நடந்த தவறு கார­ண­மாக இவ்­வாறு நடந்­து­விட்­ட­தாக ராணுவ செய்தி தொடர்­பா­ளர் அமி­தாப் சர்மா தெரி­வித்து உள்­ளார்.

இவற்றில் அஜா­சர் கிரா­மத்­திற்கு அரு­கில் உள்ள கச்­சாப் சிங் வயல்­வெ­ளி­யி­லும் மற்­றொரு ஏவு­கணை சத்­ய எனும் கிரா­மத்­தின் அரு­கில் விழுந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்த இரண்டு இடங்­களில் விழுந்த ஏவு­க­ணை­களை இந்­திய ராணு­வத்­தி­னர் மீட்­ட­னர். மூன்­றா­வது ஏவு­க­ணை­யைத் தேடும் பணி நடந்து வரு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஏவு­கணை விழுந்­த­தில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ எது­வும் ஏற்­ப­ட­வில்லை.

இது தொடர்­பாக விரி­வான விசா­ரணை நடத்த உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. அதன் பிறகு சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­லாம் எனத் தெரி­கிறது.

ஏவுகணைகளின் பாகங்கள் ஜெய்சல்மார் பகுதியில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளில் விழுந்தன. படம்: இணையம்