மூன்றாவது அணி விவகாரம்: மம்தா மீண்டும் தீவிரம்

மூன்றாவது அணி விவகாரம்: மம்தா மீண்டும் தீவிரம்

2 mins read
aeee36ed-086b-4044-9f81-0e0c46f59fba
-

கோல்­கத்தா: மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்­ஜியை கர்­நா­டகா முன்­னாள் முத­ல­மைச்­சர் குமா­ர­சாமி சந்­தித்­த­தை­யடுத்து, காங்­கி­ரஸ் அல்­லாத மூன்­றா­வது கூட்­டணி அமைக்­கும் விவ­கா­ரம் மீண்­டும் சூடு பிடித்­துள்­ளது.

இச்­சந்­திப்­பின்­போது, திரி­ணா­மூல் காங்­கி­ர­சும் மத­சார்­பற்ற ஜன­தா­த­ள­மும் இணைந்து செயல்­ப­டு­வது குறித்துப் பேசப்­பட்­ட­தாக தெரி­கிறது.

இது­கு­றித்து கர்­நா­டகா முன்­னாள் முதல்­வர் குமா­ர­சாமி தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி உட­னான சந்­திப்­பின்­போது கர்­நா­டகா சட்­ட­மன்­றத் தேர்­தல், பஞ்­ச­ரத்னா யாத்­தி­ரை­யின் வெற்றி, தேசிய அர­சி­யல் உள்­ளிட்­டவை குறித்துப் பேசி­னோம்.

"கர்­நா­டகா சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மத­ச்சார்­பற்ற ஜனதா தளத்­திற்கு மம்தா பானர்ஜி பிர­சா­ரம் செய்ய வரு­வ­தாக தெரி­வித்­தார். அதே­போல் தேசிய அள­வில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், மத­ச்சார்­பற்ற ஜன­தா­த­ளம் இணைந்து செயல்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யம் பற்றி விவா­தித்­தோம்," எனப் பதி­விட்­டுள்­ளார்.

கர்­நா­ட­கா­வில் வரும் மாதங்­களில் சட்­ட­மன்றத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. மேலும் அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாஜ­கவை வீழ்த்த பல எதிர்க்­கட்­சி­க­ளின் தலை­வர்­கள் ஒன்­றி­ணைந்த மூன்­றா­வது கூட்­ட­ணியை உரு­வாக்க முயற்­சித்து வரும் நிலை­யில் இரு தலை­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது.

தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­க­ர­ராவ், டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் உள்­ளிட்­ட­வர்­கள் காங்­கி­ரஸ் இருக்­கும் கூட்­ட­ணி­யில் இணையத் தயங்­கு­வ­தால், காங்­கி­ரஸ் இல்­லாத மாபெ­ரும் எதிர்­க்கட்சி கூட்­ட­ணியை அமைக்க மம்தா முயன்று வரு­வ­தாகக் கூறப்படுகிறது.

சில நாள்­க­ளுக்கு முன்பு உத்­தரப் பிர­தேச மாநில எதிர்க்­கட்சித் தலை­வர் அகி­லேஷ் யாத­வ்-மம்தா சந்திப்பு, சென்ற வியா­ழக்­கி­ழமை ஒடிசா முதல்­வர் நவீன் பட்­நா­யக்­கைச் சந்­தித்து பேசி­யது என அர­சி­யல் வட்­டா­ரத்­தில் இவ்­வி­வ­கா­ரம் மீண்­டும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.