பெங்களூர்: பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதில் ஊழியர்களுடன் பயணம் செய்து ஆச்சரியமளித்தார்.
பெங்களூரூ கேஆர் புரம்-ஒயிட்ஃபீல்ட் இடையேயான 13.71 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் பாதை ரூ.42,250 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதையில் சாலை மார்க்கமாக மக்கள் பயணம் செய்ய ஏறக்குறைய ஒருமணி நேரம் ஆகும்.
ஆனால் தற்போதைய மெட்ரோ சேவையால் கேஆர்புரம்-ஒயிட்ஃபீல்ட் இடையேயான பயண நேரம் வெறும் 24 நிமிடங்களாக குறையும்.
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.
இதற்கிடையே, பாஜக மூத்த தலைவராக அமித் ஷா பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வீடு தேடி சென்று சந்தித்தார்.
எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், லிங்காயத் சமூக மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, லிங்காயத் சமூக மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியில் மோடியும் அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரூ கே,ஆர்.புரம்-ஒயிட்ஃபீல்ட் இடையேயான மெட்ரோ ரயிலில் ஊழியர்களுடன் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோடி. படம்: இணையம்

