திருப்பதி: பொதுவாக பசுக்கள் புல், வைக்கோல், நெகிழிப் பொருள்கள், காகிதங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை சாப்பிடுவது வழக்கம். ஆனால், திருப்பதியில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு ஒன்று, வீடு கட்டுவதற்காக குவிக்கப்பட்டிருந்த ஆற்று மணலைச் சாப்பிடுவதைப் பார்த்து அங்குள்ள மக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதுகுறித்து நீண்டகாலமாக பசுக்களை வளர்த்துப் பராமரித்து வரும் சிலர் கூறியபோது, "வயது முதிர்ந்த பசுக்கள் மணலை எப்போதாவது ஒருமுறை சாப்பிடும். பசுவின் உடலில் தாதுச் சத்து கள் குறைபாடு ஏற்பட்டால் அதனைச் சரிசெய்து கொள்வதற்காக அவை மணலைச் சாப்பிடும். இதன்மூலம் பசுக்களுக்கு பாஸ்பரஸ், உப்பு ஆகிய சத்துகள் கிடைக்கும். பசுவைப் போலவே ஒட்டகம், மான் உள்ளிட்ட விலங்குகளும் மணல் சாப்பிடுவது வழக்கம்," என்று தெரிவித்தனர்.

