பிரியங்கா காந்தி: இனியும் அமைதி காக்கமாட்டோம்

பிரியங்கா காந்தி: இனியும் அமைதி காக்கமாட்டோம்

2 mins read
a0fcff4b-566e-4794-8420-1f0c581a22c1
-

தொழிலதிபர் அதானி குறித்து கேள்வி எழுப்பியதால் ராகுல் காந்தி பழிவாங்கப்பட்டுள்ளார்

புது­டெல்லி: எங்­கள் குடும்­பத்தை பிர­த­மர் நரேந்திர மோடி எத்­த­னையோ முறை அவ­ம­தித்­துள்­ளார். ஆனால், இனி­யும் நாங்­கள் அமை­தி­யாகப் போக­மாட்­டோம் என்று அகில இந்­தி­யக் காங்­கிரஸ் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா ளர் பிரி­யங்கா காந்தி கூறி­யுள்­ளார்.

"தேச ஒற்­று­மைக்­காக ஆயி­ரக் கணக்­கான கிலோ மீட்­டர் தூரம் என் அண்­ணன் ராகுல் காந்தி நடந்­துள்­ளார். நாட்­டுக்­கா­கத் தன் இன்­னு­யிரை தியா­கம் செய்த பிர­த­ம­ரின் மக­னால் ஒரு­போ­தும் நாட்டை அவ­ம­திக்க முடி­யாது.

"ராகுல் தேர்­த­லில் போட்டி யிடு­வ­தைத் தடுக்­கவே அவரை தகுதிநீக்­கம் செய்துள்ளனர்," என்று பிரி­யங்கா குற்­றம்சாட்­டி­னார்.

டெல்­லி­யில் நடந்த சத்­தியா கிர­கப் போராட்­டத்­தில் அவர் பேசு­கை­யில், "அண்மையில் எனது சகோத­ரர் ராகுல் காந்தி, நாடா­ளு­மன்­றத்­தில் மோடி­யைக் கட்­டிப்­பி­டித்து, உங்­கள்மீது எங்க ளுக்கு எந்த வெறுப்­பும் இல்லை. நம்­மி­டையே வெவ்­வேறு கொள்­கை­கள், சித்­தாந்­தங்­கள் இருக்­க­லாம். ஆனால், எங்களி­டம் வெறுப்பு இல்லை," என்றார்.

"ஒரு மனி­தனை எவ்­வ­ளவு அவ­ம­திப்­பீர்­கள்? இது­தான் இந்த நாட்­டின் பாரம்­ப­ரி­யமா? எங்­கள் குடும்­பம் இந்த நாட்­டிற்­கா­கப் போரா­டி­ய­தற்­காக நாங்­கள் வெட்­கப்­பட வேண்­டுமா?" என்று கேள்வி எழுப்­பி­னார்.

அப்பா, அம்மா, சகோ­த­ரன் எனத் தன் ஒட்­டு­மொத்த குடும்­பத்­தை­யும் பிர­த­மர் மோடி அவ­மா­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சாடிய பிரி­யங்கா, தன் குடும்­பம் இந்தி யாவின் வளர்ச்­சிக்­காக ரத்­தம் சிந்­தி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

தொழி­ல­தி­பர் அதானி குறித்து கேள்வி எழுப்­பி­ய ஒரே கார ணத்தால் தன் சகோ­த­ரர் ராகுல் காந்தி பழி­வாங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறியுள்ள பிரியங்கா, அந்தக் கேள்­வி­கள் தொடர்ந்து கேட்­கப்­படும் என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி எம்.பி. பத­வி­யில் இருந்து தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­ட­தைக் கண்­டித்து, நாடு முழு­வதும் காங்­கி­ரஸ் உறுப் பினர்­கள் பல்­வேறு போராட்டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

ராகுலின் சொந்த தொகு­தி­யான வய­நாட்­டில் நூற்­றுக்­க­ணக்­கான இளை­யர்­கள் கையில் தீப்­பந்­தத்துடன் பேர­ணி சென்­ற­னர்.

பெங்­க­ளூ­ரு­வி­லும் இளை­ஞர் காங்­கி­ர­சார் தீப்­பந்த ஊர்­வ­லம் நடத்­தி­னர்.

பஞ்­சாப், ஹரி­யானா, ராஜஸ்­தான், மத்­தி­யப்­பி­ர­தே­சம், ஜம்மு காஷ்­மீர் மாநி­லங்­க­ளி­லும் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் சத்­தியாகிர­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்டனர்.

அதானி குழு­மத்­தின் பங்கு விற்­பனை மோசடி குறித்து கூட்டுக்­குழு விசா­ர­ணைக்கு உத்­தரவிட வலி­யு­றுத்தி நாடாளு மன்­றத்­தில் நேற்று கறுப்பு உடை அணிந்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பங்­கேற்­ற­னர். தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் கறுப்பு உடை­யு­டன் பங்­கேற்ற காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­கள், நேற்று இரவு முழு­வ­தும் அங்­கேயே தங்கி உள்­ளி­ருப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­ட்டனர்.