புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 'கார் பேரணி' நிகழ்வைத் தொடங்கிவைத்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
"இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கு லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. அவற்றில் ஒன்றரை லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்," என ஓம் பிர்லா வேதனை தெரிவித்தார்.
"விபத்துகளால் குடும்பம், சமூகம், நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படுகிறது. இனிமேலாவது விபத்துகள் நிகழாமல் அதிக கவனம் செலுத்தவேண்டும். மக்கள் சாலைவிதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

