ராகுல் காந்தி: விரைவில் அரசு பங்களாவைக் காலி செய்கிறேன்

ராகுல் காந்தி: விரைவில் அரசு பங்களாவைக் காலி செய்கிறேன்

2 mins read
82352f83-d2c3-4549-ada1-14873fbed71a
-

புது­டெல்லி: மக்­க­ளவை உறுப்பினர் என்ற முறை­யில் மத்­திய அரசு தனக்கு வழங்கியிருந்த பங்­க­ளாவை விரை­வில் காலி செய்­துவிடுவதாக ராகுல் காந்தி அறி­வித்துள்­ளார்.

மக்­க­ளவையின் வீட்டு வசதிக் குழு துணைச் செயலாளர் டாக்டர் மோகித் ராஜ­னுக்கு அவர் அனுப்­பியுள்ள கடி­தத்­தில், இதுவரை நான்கு முறை நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெடுக்­கப்­பட்டு பொதுமக்­க­ளுக்­குச் சேவை­யாற்றி உள்­ளேன்.

கடந்த 20 ஆண்­டு­க­ளாக அரசுப் பங்­க­ளா­வில் இருந்த மகிழ்ச்­சி­யான தரு­ணங்களை என்­னால் என்­றும் மறக்கமுடி­யாது. விதி­மு­றை­க­ளுக்கு உட் பட்டு பங்களாவைக் காலி செய்து விடுகிறேன் எனக் கூறியுள்­ளார்.

முன்னதாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த ஏப்ரல் மாதம் 22ஆம் தே­திக்­குள் காலி செய்­யு­மாறு மக்­க­ளவைச் செய­ல­கம் ராகுல் காந்திக்கு அறிவிப்புக் கடிதம் அனுப்­பி­ இருந்ததை அடுத்து, பங்­க­ளாவை காலி செய்­வதாக ராகுல் காந்தி அறி­வித்துள்­ளார்.

இதனிடையே, நாடா­ளு­மன்ற வர­வு­செ­ல­வுத் திட்ட கூட்­டத் தொட­ரின் இரண்­டா­வது அமர்வில், ஆளும் கட்­சி­யி­ன­ரும் எதிர்க்­கட்சியின­ரும் அம­ளி­யில் ஈடு­பட்­ட­தால், நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­களும் 11வது நாளாக நேற்­றும் முடங்­கின.

அதானி குழும முறை­கே­டு­கள் குறித்து நாடாளுமன்றக் கூட்­டுக்­குழு விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்று வலி­யு­றுத்தி எதிர்க்­கட்­சி­களும் இந்­தி­யாவை தரம் தாழ்த்தி ­விமர்சித்தது தொடர்பில் ராகுல்­காந்தி மன்­னிப்பு கேட்­க­வேண்­டும் என்று ஆளும் பாஜ­க­வும் நாடா­ளு­மன்­றத்­தில் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இத­னால் நாடாளு­மன்­ற அவை நட­வ­டிக்­கை­கள் முடங்­கின.

டெல்­லி­யில் கறுப்புச் சட்டை அணிந்து பேரணி நடத்­திய எதிர்க்­கட்சி எம்­பிக்­கள், அதானி-பிர­த­மர் இடை­யி­லான உறவு குறித்து கேள்வி எழுப்­பி­ய­தால் ராகுல் காந்­தி­யின் பதவி பறிக்­கப்பட்­ட­தாக குற்­றம்­சாட்­டி­னர்.

டெல்லி, மும்பை, கோல்­கத்தா, பெங்­க­ளூரு உள்­ளிட்ட பல நக­ரங்­களில் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் போாராட்­டங்­களில் ஈடு­பட்டு வருகின்­ற­னர்.

கேரள மாநி­லம், கண்­ணூ­ரில் தபால் அலு­வ­ல­கத்தை முற்­றுகையிட்ட காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர், சாலை­யில் டயர்­களை எரித்­த­னர்.

இதை­ய­டுத்து தண்­ணீ­ரைப் பீய்ச்சி அடித்­தும் தடி­யடி நடத்­தி­யும் காங்­கி­ர­சாரை காவ­லர்­கள் விரட்டியடித்­த­னர்.

குஜ­ராத் சட்­டப்­பே­ர­வைக்குக் கறுப்புச் சட்டை அணிந்து வந்­தி­ருந்த 16 காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­கள் நடப்பு கூட்­டத்­தொ­டர் முழு­வ­தும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.