ஜார்க்கண்ட்: விடுமுறையன்று மாடுகளிடம் வேலை வாங்குவது பாவம் என்கின்றனர் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், லாத்தேஹார் மாவட்டவாசிகள்.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில சிற்றூர்களில் கால்நடைகளுக்கும் வாரம் ஒருநாள் ஓய்வளிக்கப்படுகிறது. ஓய்வுநாளில் பசுக்கள், எருமை களிடம் பால்கூடக் கறப்பதில்லை. அன்று அவற்றுக்கு நல்ல உணவும் வழங்கப்படுகிறது.
வாரம் ஒருநாளேனும் ஓய்வளிக்கப்படும்போது கால்நடைகள் நலமாகவும் ஆற்றலுடனும் விளங்குவதாக அவ்வூர்களைச் சேர்ந்த முதியவர்கள் சொல்கின்றனர்.
இந்நடைமுறையை நூறாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். பழங்குடி மக்கள் வியாழக்கிழமைகளிலும் மற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கால்நடைகளுக்கு ஓய்வளிப்பதாக லாத்தேஹார் மாவட்டம், துரிசாட் எனும் ஊரைச் சேர்ந்த சஞ்சய் கஞ்சு என்பவர் குறிப்பிட்டார்.
"எவ்வளவு அவசரமெனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடைகளிடம் நாங்கள் வேலை வாங்குவதில்லை. அப்படிச் செய்வதைப் பாவம் என நினைக்கிறோம்," என்றார் ஹெத்-போக்ரா ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராமேஸ்வர் சிங்.
இப்பழக்கம் நடப்பிலிருப்பதை மாவட்ட விலங்குநல வாரிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியதாக 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி தெரிவிக்கிறது. ஒருமுறை ஓய்வு நாளன்று ஒரு காளையைக் கொண்டு ஒரு விவ சாயி நிலத்தை உழுதபோது, அது அங்கேயே மயங்கி விழுந்து இறந்ததை அடுத்து இப்பழக்கம் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

