புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 2,151 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகாவில் ஒருவர் என நால்வர் மாண்டதாகவும் அது கூறியது.
கூடினபட்சமாக மகாராஷ்டிராவில் 450, கேரளாவில் 332, குஜராத்தில் 316, டெல்லியில் 214, கர்நாடகாவில் 135, தமிழ்நாட்டில் 105, இமாச்சலப் பிரதேசத்தில் 140 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

