சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங் நேப்பாளத்தில் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து இந்திய தூதரகம் சார்பில் நேப்பாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
எல்லைகளில் சோதனைகளை வலுப்படுத்தி ஒத்துழைக்கத் தயார் என்று நேப்பாள அரசு இந்தியாவிடம் உறுதிகூறி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
பஞ்சாப்பைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங் 'அனந்த்புர் கல்சா ஃபவுஜ்' என்ற பெயரில் தீவிரவாதக் குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார்.
அவரைக் கைது செய்ய காவல்துறை களத்தில் இறங்கியதையடுத்து அவர் மாயமானார்.
கடந்த 18ஆம் தேதி முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

