புதுடெல்லி: லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கத்தை ரத்து செய்யப்பட்ட தாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரைத் தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை எதிர்த்து அந்த எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் ரத்தானதாக மக்களவைச் செயலகம் தெரிவித்தது.

