இந்தியா 2022-23 நிதியாண்டில் US$ 760பி. ஏற்றுமதி சாதனை

இந்தியா 2022-23 நிதியாண்டில் US$ 760பி. ஏற்றுமதி சாதனை

1 mins read
206e85d8-0be8-48d4-b0ba-05e826b13562
-

புது­டெல்லி: இந்­தியா 2022-23 நிதி­யாண்­டில் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக US$760 பில்­லி­யன் ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி சாத­னையை நிகழ்த்­து­வ­தா­க மத்­திய வர்த்­தக, தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் தெரி­வித்­தார்.

அனைத்­து­லக அள­வில் பொரு­ளி­யல் சூழல்­கள் சரி­யில்லை என்­றா­லும் இந்­தி­யா­வின் ஏற்­று­மதி US$750 பில்­லி­ய­னைக் கடந்­து­விட்­ட­தா­க­வும் இந்த மாத முடி­வில் அது US$760 பில்­லி­யன் அள­வைத் தொட்­டு­வி­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

நாட்­டின் 75வது சுதந்­திர ஆண்­டைக் குறிக்­கும் வகை­யில் நடந்த 'அம்­ரித்க் மோட்­சவ்' கொண்­டாட்­டத்­தின்­போது, அமைச்­சர் பெரு­மி­தத்­து­டன் இந்த அறி­விப்பை விடுத்­தார்.

இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்­துறை கூட்­ட­மைப்­பின் வரு­டாந்­திர கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய பியூஷ் கோயல், கடந்த 9 ஆண்­டு­க­ளாக எவ்­வித தடங்­க­லும் இல்­லாத பொரு­ளியல் வளர்ச்­சி­க்குத் தேவை­யான திட்­டங்­கள் அமலாகி வரு­வ­தாகக் குறிப்­பிட்­டார்.

வர்த்­த­கம், சேவைத் துறை­கள் நல்ல வளர்ச்சி கண்­டுள்­ள­தாகக் கூறிய அமைச்­சர், கடந்த 2020- 2021ஆம் நிதி ஆண்­டில் நாட்­டின் ஏற்­று­மதி வளர்ச்சி US$500 பில்­லி­ய­னாக இருந்­தது என்­றார்.