கணிப்பு: கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

கணிப்பு: கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

2 mins read
8680e5fe-fb5c-499a-949d-d0e78412af4a
-

பெங்களூரு: கர்­நா­ட­கா­வில் நடை­பெற உள்ள சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் பெரும்­பான்மை பலத்­து­டன் ஆட்­சி­ அமைக்­கும் என அண்­மைய கருத்­துக்­க­ணிப்பு தெரி­விக்­கிறது.

ஏபிபி-சிவோட்­டர்ஸ் நடத்தி உள்ள இக்­க­ருத்­துக்­க­ணிப்­பின் முடி­வு­கள் கர்­நா­ட­கம் மட்­டு­மல்­லா­மல், தேசிய அர­சி­யல் களத்­தி­லும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

எதிர்­வ­ரும் மே 10ஆம் தேதி­யன்று கர்­நா­டக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதற்­கான அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை தேர்­தல் ஆணை­யம் வெளி­யிட்ட அடுத்த நிமி­டமே அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல் களத்­தி்ல் வரிந்­து­கட்ட தொடங்­கி­விட்­டன.

கர்­நா­ட­கா­வில் மொத்­தம் 222 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­கள் உள்­ளன. இம்­முறை ஒரே கட்­ட­மாக வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்­ளது.

தேர்­தல் நடத்தை விதி­மு­றை­கள் உட­ன­டி­யாக அம­லுக்கு வந்­துள்ள நிலை­யில், இனி வரும் நாள்­களில் பிர­சா­ரம் சூடு­பி­டிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, கர்­நா­டக மக்­க­ளின் மன­நி­லை­யைப் புரிந்­து­கொள்­ளும் வித­மாக பல்­வேறு ஊட­கங்­கள், அமைப்­பு­கள் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் தொடர்­பான கருத்­துக்­க­ணிப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. அந்த வகை­யில் முத­லில் ஏபிபி-சிவோட்­டர்ஸ் நிறு­வ­னங்­கள் இணைந்து நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பின் முடி­வு­கள் வெளி­யாகி உள்­ளன.

இம்­முறை காங்­கி­ரஸ் கட்­சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என­க­ருத்­துக்­க­ணிப்பு தெரி­விக்­கிறது.

மொத்­த­முள்ள தொகு­தி­களில் காங்­கி­ரஸ் கட்சி 115 முதல் 127 இடங்­களில் வெற்­றி­பெ­றும் என்­றும் பெரும்­பான்மை பலத்­து­டன் ஆட்சி அமைக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் கருத்­துக்­க­ணிப்பு கூறு­கிறது.

தற்­போ­தைய ஆளுங்­கட்­சி­யான பாஜக 68 முதல் 80 தொகு­தி­க­ளைக் மட்­டுமே கைப்­பற்­றும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, ஜீ நியூஸ் ஊட­கம் மேற்­கொண்ட மற்­றொரு கருத்­துக் கணிப்­பில், பாஜக 96 முதல் 106 இடங்­களில் வெல்­லும் என்­றும் காங்­கி­ரஸ் கட்சி 88-98 இடங்­களில் வெல்­லும் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. பாஜக, காங்­கி­ரஸ் கட்சி­க­ளா­ல் ஆட்­சி­ய­மைக்க முடி­யாத பட்­சத்­தில் மதச்­சார்­பற்ற ஜனதா தளம் புதிய ஆட்சி அமைப்­ப­தில் முக்­கிய பங்கு வகிக்­கும் என்­றும் கூறப்படுகிறது.