கோல்கத்தா: மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு நாள் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இந்தப் போராட்டத்தை அம்மாநில முதல் வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
அப்போது, மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
நூறு நாள் வேலைத்திட்டம், இந்திரா வீட்டு வசதித் திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டங்க ளுக்கான நிதிைய மத்திய அரசு நிறுத்திவிட்டதாக அவர் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்த அவர், மத்திய அரசைக் கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த இரு நாள் களாக மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டங்கள் நடை பெற்றன. அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
தலைநகர் கோல்கத்தாவில் உள்ள சிவப்பு சாலையில் அம்பேத் கர் சிலைக்கு முன்பு கூடியிருந்த தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய மம்தா, போராட் டத்தைக் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்.
"மேற்குவங்க மாநிலத்துக்கு மட்டும் ஏறத்தாழ 100,000 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் இம்மாநிலத்துக்கு நிதி முறையாக ஒதுக்கப்பட வில்லை. மேற்கு வங்க மாநிலத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது," என்றார் முதல்வர் மம்மா.
இதற்கிடையே, முதல்வர் மம்தா தேசிய கீதத்தை அவமதித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பில், அவருக்கு எந்தவித கருணையும் காட்டக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

