தூக்குத் தண்டனை; நான்கு பேர் விடுவிப்பு

தூக்குத் தண்டனை; நான்கு பேர் விடுவிப்பு

1 mins read
e6c9c83a-1fcb-4b43-9d0d-c5446b209899
-

ஜெய்ப்­பூர்: ஒட்­டு­மொத்த நாட்­டை­யும் உலுக்கி எடுத்த ஜெய்ப்­பூர் தொடர் குண்டு வெடிப்புச் சம்­ப­வத்­தில் குற்­றம்­சாட்­டப்­பட்ட அனை­வ­ரை­யும் ஜெய்ப்­பூர் நீதி மன்­றம் விடு­தலை செய்­துள்­ளது.

மொத்­தம் ஐந்து பேர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் போதிய ஆதா­ரங்­கள் இல்லை என்­ப­தைச் சுட்­டிக்­காட்டி நீதி­மன்­றம் அவர்­களை விடு­வித் தது.

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி ஜெய்ப்­பூர் நக­ரில் தொடர் குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

மொத்­தம் 12 நிமிட இடை வெளி­யில் தொடர்ந்து எட்டு இடங்­களில் குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வங்­களை தீவி­ர­வா­தி­கள் நிகழ்த்­தி­னர். இதில் 71 அப்­பாவி மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

மத்­திய, மாநில புல­னாய்வு அமைப்­பு­களும் காவல்­து­றை­யி­ன­ரும் தீவிர தேடுதல் வேட்டை மேற்­கொண்­ட­தில் ஐந்து பேர் அடுத்­த­டுத்து கைதா­கி­னர். ஐவர் மீதும் பதி­வான வழக்­கு­க­ளின் அடிப்­ப­டை­யில் ஜெய்ப்­பூர் சிறப்பு நீதி­மன்­றத்­தில் விசா­ரணை நடத்­தப்­பட்டு, அதன் முடி­வில் நான்கு பேருக்கு மட்­டும் தூக்­குத்­தண்டனை விதிக்­கப்­பட்­டது. ஒரு­வர் விடு­விக்­கப்­பட்டார்.

இந்­தத் தீர்ப்பை எதிர்த்து தண்­டனை பெற்ற நான்கு பேரும் ராஜஸ்­தான் உயர் நீதி­மன்­றத்­தில் மேல் முறை­யீடு செய்­த­னர். அந்த மனு மீதான விசா­ர­ணை­யின் முடி­வில் நான்கு பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.