2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு இலக்கு

2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு இலக்கு

2 mins read
72489d06-9f06-4e26-bfb7-c317218f5f24
-

'அந்நிய வணிகக் கொள்கை 2023' வெளியீடு

புது­டெல்லி: வரும் 2030ஆம் ஆண்­டிற்­குள் நாட்­டின் ஏற்­று­மதியை இரண்டு டிரில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக உயர்த்­தும் நோக்­கில், இந்­திய அர­சாங்­கம் 'அந்­நிய வணி­கக் கொள்கை 2023'ஐ வெளி­யிட்­டுள்­ளது.

இதற்­கு­முன் ஐந்­தாண்­டு­களுக்கு ஒரு­முறை அந்­நிய வணி­கக் கொள்கை வெளி­யி­டப்­பட்டு வந்­தது. ஆனால், இன்­று­மு­தல் நடப்­பிற்கு வரும் புதிய அந்­நிய வணி­கக் கொள்கை எப்­போ­து­வரை நடப்­பில் இருக்­கும் என்­பது குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

மாறாக, தேவைப்­ப­டும்­போது அது புதுப்­பிக்­கப்­படும் என்று அந்­நிய வணி­கத் தலைமை இயக்­கு­நர் சந்­தோஷ் சாரங்கி கூறி­னார்.

நேற்­று­டன் முடிந்த 2022-23 நிதி­யாண்­டில் இந்­தி­யா­வின் மொத்த ஏற்­று­மதி US$760-770 பில்­லி­ய­னாக இருக்­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக திரு சாரங்கி தெரி­வித்­தார். கடந்த 2021-22 நிதி­யாண்­டில் அது US$676 பில்­லி­ய­னாக இருந்­தது.

கடை­சி­யாக 2015 ஏப்­ரல் 1ஆம் தேதி ஐந்­தாண்டு அந்­நிய வணி­கக் கொள்கை நடப்­பிற்கு வந்­தது. ஆயி­னும், கொவிட்-19 பர­வ­லா­லும் அத­னைத் தொடர்ந்து உல­க­ள­வில் பொரு­ளி­யல் நட­வடிக்­கை­களில் ஏற்­பட்ட இடை­யூறு­க­ளா­லும் அக்­கொள்கை பல­முறை நீட்­டிக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, புதிய அந்­நிய வணி­கக் கொள்கை ஃபரி­தா­பாத், மொரா­தா­பாத், மிர்­சா­பூர், வார­ணாசி என ஏற்­று­மதி உன்­ன­தத்­திற்கு நான்கு புதிய நக­ரங்­களை அடை­யா­ளம் கண்­டுள்­ளது. ஏற்­கெ­னவே ஏற்­று­மதி உன்­ன­தத்­திற்­கான 39 நக­ரங்­கள் உள்­ளன.

அந்­நிய வணி­கக் கொள்கை மூலம் மின்­வ­ணிக ஏற்­று­மதி அடை­யும் பயன்­களும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன. வரும் 2030வாக்­கில் மின்­வ­ணிக ஏற்­று­மதி US$200-300 பில்­லி­ய­னாக உய­ரும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தூதஞ்­சல் சேவை (கூரி­யர்) மூலம் அனுப்­பப்­படும் பொரு­ளுக்­கான விலை­ம­திப்பு வரம்­பும் ரூ.5 லட்­சத்­தில் இருந்து ரூ.10 லட்­சத்­திற்கு உயர்த்­தப்­ப­டு­கிறது.

இந்­திய ரூபாயை அனைத்­து­லக நாண­ய­மாக அங்­கீ­க­ரிக்­கச் செய்­ய­வும் அதன்­மூ­லம் அனைத்­து­லக வணிக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அனு­ம­தி­பெ­ற­வும் புதிய அந்­நிய வணி­கக் கொள்கை முயல்­கிறது.