ஆளுநரிடம் விவரம் கேட்ட அமித்ஷா; சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி என நிதிஷ் சாடல் பீகார் வன்முறை: இளையர் பலி

ஆளுநரிடம் விவரம் கேட்ட அமித்ஷா; சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி என நிதிஷ் சாடல் பீகார் வன்முறை: இளையர் பலி

2 mins read
26954020-28b2-4f03-9c0b-027b9ae6f0f1
-

பாட்னா: பீகார் மாநி­லத்­தின் சச­ராம் மாவட்­டத்­தில் நேற்று அதி­காலை வெடி­குண்டு வெடித்­த­தில் இளை­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். ஐந்து பேர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த 30ஆம் தேதி நாடெங் கும் நடை­பெற்ற ராம நவமி கொண்­டாட்­டத்­தின்­போது, பீகா­ரின் நாலந்தா, சச­ராம் ஆகிய மாவட்­டங்­களில் சாமிச் சிலை­கள் ஊர்­வ­ல­மாக வந்­தன.

அப்­போது, இரு தரப்­பி­னருக்கு இடையே வகுப்­பு­வாத வன்முறை மூண்­டதில், சிலர் கல்­வீசித் தாக்­கி­ய­தா­க­வும் சில இடங்­களில் வாக­னங்­கள் எரிக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­படுகிறது.

இந்தச் சம்பவம் சற்றே தணிந் திருந்த நிலை­யில், மீண்­டும் இப்­போது குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஏற்­கெ­னவே 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப் பட்டு நிலைமை கண்­கா­ணிக் கப்­பட்டு வரு­வ­து­டன், கூடு­தல் பாது­காப்­பும் போடப்­பட்­டுள்­ளது.

பீகா­ரில் நில­வும் தற்­போ­தைய சூழல் குறித்து மாநில ஆளு­நர் ராஜேந்­திர விஸ்­வ­நாத் அர்­லே­ கரி­டம் நேற்று விவ­ரம் கேட்­ட­றிந்த மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, வகுப்­பு­வாத வன் முறை குறித்து கவலை தெரி­வித்­தார்.

இந்நிலையில், அடுத்­த­டுத்து மூளும் வன்­முறை சம்­ப­வங்­களால் சச­ராம் பகு­தி­யில் 26 பேர், நாலந்தா பகு­தி­யில் 80 பேர் என 106 பேரை பீகார் காவல்­து­றை­யினர் கைது செய்­துள்­ள­னர்.

இத­னி­டையே, வதந்­தி­களை நம்­ப­வேண்­டாம் என்­றும் சட்­டம்-ஒழுங்­கைப் பாதுகாக்க ஒத்து ழைக்க வேண்­டும் என்­றும் டுவிட்­டர் பதிவு வழி பொது­மக்­க­ளை பீகார் காவ­லர்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

"வதந்தி பரப்­பு­ப­வர்­கள் மீது கடு­ம் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என நாலந்தா மாவட்ட நீதிபதி ஷஷாங்க் சுபாங்­கர் டுவிட்­டரில் எச்சரித்­துள்­ளார்.

முன்­ன­தாக பீகார் முதல்­வர் நிதிஷ் குமார், இந்­தச் சம்­ப­வங்­கள் இயற்­கை­யாக நடந்­தது அல்ல என்­றும் சமூ­கத்­தில் அமைதி, நல்­லி­ணக்­கம், சட்­டம் ஒழுங்கை சீர்­கு­லைப்­ப­தற்­காக சிலர் வேண்­டு­மென்றே குற்றச் செயல்களில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்­றும் சாடி­னார்.

மாநி­லத்­தில் சட்­டம் ஒழுங்கு மோச­மாக இருப்­பதை அடுத் தடுத்து நிகழும் வன்முறைகள் சுட்­டிக்­காட்­டு­வ­தாக உள்ளது என பாஜ­க கூறியிருப்பதை நிதிஷ் குமார் நிரா­க­ரித்துள்ளார்.

சசராம், பிஹார்ஷரீப்பில் நடந்த வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வாகனங்கள், வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு பலர் காயமடைந்தனர். 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

படம்: டுவிட்டர்