மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 604 கிலோ கடத்தல் தங்கம் நீதித்துறைக்கு அழுத்தம்: காங்கிரஸ் மீது பாஜக புகார்

மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 604 கிலோ கடத்தல் தங்கம் நீதித்துறைக்கு அழுத்தம்: காங்கிரஸ் மீது பாஜக புகார்

3 mins read
30e1bb61-7cdf-4f41-ba5a-626d684a0cb5
-

பாஜக அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் முதல்வர்கள்

புது­டெல்லி: நீதித்­து­றைக்கு காங் கிரஸ் கட்சி தேவை­யற்ற அழுத்­தத்தைக் கொடுக்க முயல்­வ­தாக மத்­திய சட்ட அமைச்­சர் கிரண் ரிஜிஜு குற்­றம்சாட்­டி­யுள்­ளார்.

முன்­னாள் காங்­கி­ரஸ் தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்­கப்­பட்ட ஈராண்டு சிைறத்­தண்­ட­ைனக்கு எதி­ராக குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்ட அமர்வு நீதி­மன்­றத்­தில் செவ்வா யன்று ேமல்­மு­ைற­யீடு ெசய்­தார்.

இந்நிலையில், மேல்­முறை­யீடு செய்­வ­தற்கு ராகுல் காந்தி நேரில் செல்லவேண்­டிய தேவை­யில்­லாத நிலை­யில், நீதித்­து­றைக்கு அழுத்­தம் தரும் விதத்தில் காங்­கி­ரஸ் கட்சி நடந்து கொண்டிருப்­ப­தாக கிரண் ரிஜிஜு சாடி­யுள்ளார்.

"நீதித்­து­றையை அச்­சு­றுத்­தும் நோக்­கில் காங்கிரஸ் கட்சியினர் நாட­கம் நடத்­திக்­கொண்­டி­ருக் கின்றனர். இது கண்­டிக்­கத்­தக்­கது," என்­றும் அவர் மேலும் விமர்சித்­துள்ளார்.

நாட்டைவிட தங்களது ஒரு குடும்­பம் மட்­டுமே மேலா­னது என்று காங்­கி­ரஸ் கட்சி கரு­து­வ­தா­க­வும் கிரண் ரிஜிஜு சாடி­னார்.

முன்­னாள் பிர­த­மர் பி.வி. நர­சிம்­ம­ராவ், முன்­னாள் நிதி அமைச்­சர் ப.சிதம்­ப­ரம், கர்­நா­டக காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே. சிவக்­கு­மார் ஆகி­யோர் சிறைக்­குச் சென்­ற­போது, காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த எத்­தனை பேர் அவர்­க­ளு­டன் சென்­றனர் என மத்­திய அமைச்­சர் அனு­ராக் தாக்­கூரும் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

பாஜக அமைச்சர்களின் இக்குற்றச்சாட்டுகளுக்கு காங்­கி­ரஸ் கடும் கண்­டன­ம் தெரி­வித்­துள்ளது.

பாஜ­க­வின் விமர்­ச­னம் அவர்­களது மோச­மான சிந்­த­னையை வெளிப்­ப­டுத்தி இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள முன்­னாள் அமைச்­சர் சசி தரூர், இது சிறு­பிள்­ளைத்தன­மா­ன குற்றச்சாட்டுகள் எனவும் டுவிட்­ட­ரில் தனது கண்­ட­னத்­தைப் பதிவு செய்­துள்­ளார்.

காங்­கி­ரஸ் முதல்­வர்­கள் விளக்­கம்

பாஜ­க­வின் குற்­றச்­சாட்டை மறுத்­துள்­ள சத்­தீஸ்­கர் முதல்­வர் பூபேஷ் பெகல், "நான் என் தலை­வ­ரு­டன் (ராகுல் காந்தி) சென்றது எப்­படி நீதித்துறைக்கு அழுத்­தத்தைக் கொடுப்­ப­தாக ஆகும்? ராமநவமி ஊர்­வ­லத்­தில் வெடித்த கல­வ­ரங்­கள் மூலம் மேற்கு வங்­கத்­தி­லும் பீகாரிலும் பாஜ­க­வி­னர் தொடர்ந்து குழப்­பத்தை ஏற்­ப­டுத்­திக்கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதற்கு எதி­ராகப் பிர­த­மர் மோடியோ, உள்­துறை அமைச்­சர் அமித்ஷாவோ இது­வரை மக்­க­ளுக்கு எந்த ஒரு விளக்கமும் கூற முன்­வர வில்லை,'' என குற்­றம்­சாட்­டி­னார்.

"நீதித்துறைக்கு யாரா­லும் அழுத்­தம் கொடுக்கமுடி­யாது. காங்­கி­ரஸ் மிகப்பெரிய எதிர்க்­கட்சி. ராகுல் காந்தி நாட்­டின் மிகப்பெரிய தலை­வர். அவரோடு நாங்­கள் சென்றது அர­சி­யல் நாட­க­மல்ல, காந்தியின் நேர்மை யான வழி,'' என இமாச்­ச­லப் பிர­தேச முதல்­வர் சுக்­விந்­தர் சிங் சுகு தெரி­வித்­துள்­ளார்.

மும்பை: மும்பை அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் கடந்த 11 மாதங்­களில் மட்­டும் 604 கிலோ கிராம் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அவற்­றின் மதிப்பு ரூ.306 கோடி.

தங்­கக் கடத்­த­லில் இந்­தி­யா­வின் ஆகப்­பெ­ரிய மைய­மாக மும்பை விமான நிலை­யம் திகழ்­கிறது. அதற்கு அடுத்­த­டுத்த நிலை­களில் டெல்லி (374 கிலோ), சென்னை (306 கிலோ) விமான நிலை­யங்­கள் வரு­கின்­றன. சுங்­கத்­துறை வெளி­யிட்­டுள்ள தக­வ­லில் இது தெரி­விக்­கப்­பட்­டது.

2022 ஏப்­ர­லுக்­கும் இவ்­வாண்டு பிப்­ர­வ­ரிக்­கும் இடைப்­பட்ட கால­க்கட்­டத்­தில் மும்பை விமான நிலை­யத்­தில் கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்­தின் அளவு, அதற்கு முந்­திய ஆண்­டில் (91 கிலோ) இருந்­த­தை­விட அதி­கம்.

தங்­கம் கடத்­து­வோ­ருக்கு மும்பை பெரிய சந்­தை­யாக விளங்­கு­கிறது. இந்­தி­யா­வின் மற்ற பெரு­ந­கர்­க­ளான டெல்லி, கோல்­கத்தா, சென்னை ஆகி­ய­வை­யும் தங்­கக் கடத்­த­லின் முக்­கிய மைய­மா­கத் திகழ்­கின்­றன.

தங்­கக் கடத்­த­லுக்­குத் தள­மாக விளங்­கும் நகர்­களில் இப்­போது ஹைய­த­ரா­பாத்­தும் சேர்ந்­துள்­ளது. கடந்த ஆண்டு அங்கு 124 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. ஒப்­பு­நோக்க, 2021ஆம் ஆண்டு அங்கு 55 கிலோ தங்­கம் பிடி­பட்­டது.

2022 அக்­டோ­ப­ரில் இருந்து, தங்­கம் கடத்­தி­ய­தற்­காக மும்­பை­யில் 20க்கும் மேற்­பட்ட வெளி­நாட்­ட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

ஒவ்­வோர் ஆண்­டும் இந்­தியா வுக்கு மொத்­தம் 720 டன் தங்­கம் வந்­து­சேர்­வ­தாக நகைக்­கடைக்­கா­ரர்­கள் கூறினர். அதில் 380 டன் தங்­கம் சட்­ட­பூர்­வ­மாக வரு­கிறது. அதற்கு 15% இறக்­கு­மதி வரி­யும் 3% ஒருங்­கி­ணைந்த பொருள், சேவை வரி­யும் விதிக்­கப்­ப­டு­கிறது. எஞ்­சிய 340 டன் தங்­கம், இந்­தி­யா­வுக்­குக் கடத்தி வரப்­படு­கிறது.

அதே­வே­ளை­யில், ஆண்­டு­தோ­றும் ஏறக்­கு­றைய 900 டன் தங்­கம் இந்­தி­யா­வுக்கு இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக உள்­நாட்டு வரு­வாய்ச் சேவை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.