தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடத்துக்கு பெயர் சூட்டிய சீனா

2 mins read
65e2a562-3a3e-4c7a-9d95-3674a82d5ec8
-

புது­டெல்லி: அரு­ணாச்­ச­லப் பிரதே சம் மீதான தனது உரி­மையை மீண்­டும் நிலை­நாட்­டும் வித­மாக, அங்­கி­ருக்­கும் 11 இடங்­க­ளின் பெயர்­களை மாற்­றி­யுள்­ளது சீனா.

சீன, திபேத்­திய, பின்­யின் எழுத்­து­களில் அந்த இடங்­க­ளுக்கு புதிய பெயர்­க­ளைச் சூட்டி சீனா­வின் சிவில் விவ­கார அமைச்சு அதற்­கான அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

பெய­ரி­டப்­பட்ட 11 இடங்­களில் ஐந்து மலைச் சிக­ரங்­கள், இரு குடி­யி­ருப்­புப் பகு­தி­கள், இரு நிலப் பகு­தி­கள், இரு ஆறு­கள் ஆகி­யன இருப்­ப­தால் அதற்­கான நிர்­வாக அமைப்­பு­க­ளை­யும் வகுத் திருப்­ப­தாக சீன அர­சின் குளோ­பல் டைம்ஸ் செய்­தித் தளத்­தில் குறிப்­பி­டப்­பட்டிருக்­கிறது.

குறிப்­பிட்ட அந்த 11 இடங் களும் தென் திபேத்­தின் ஜங்­னான் பகுதி என சீனா­வால் அழைக்­கப்­ப­டு­கிறது என்­றும் இப்­படி பெயர் மாற்­றம் செய்­யப் பட்­டி­ருப்­பது மூன்­றா­வது முறை என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

கடந்த 2018 மற்­றும் 2021ல் இது­போன்று பெயர் மாற்­றப் பட்­டி­யல்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

அரு­ணா­ச­லப் பிர­தேச தலை­நகர் இடா­ந­க­ரில் கடந்த மார்ச் மாதத்­தின் இறு­தி­யில் ஜி-20 மாநாட்­டுக் கூட்­டம் நடந்தது. இதில் சீனா பங்­கேற்­காத நிலை­யில், அதற்­கான கார­ண­மும் சீன அரசு சார்­பில் வெளியிடப்­ப­ட­வில்லை.

இந்­தச் சூழ­லில் சீனா­வின் பெயர் மாற்ற நட­வ­டிக்­கைக்கு இந்­தியா கடும் கண்­ட­னம் ெதரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து இந்­தி­யா­வின் வெளி­வி­வ­கார அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அரிந்­தம் பக்சி வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில், "அரு­ணா­ச­லப் பிர­தே­சம் இந்­தி­யா­வின் ஒருங்­கி­ணைந்த ஒரு பகு­தி­யாக இன்­ற­ள­வும் உள்­ளது. தொடர்ந்து இந்­தி­யா­வின் ஒரு பகு­தி­யாக இருப்­ப­து­டன் வருங்­கா­லத்­தி­லும் இதே நிலை தொட­ரும்," என்று தெளி­வுப் படுத்தி உள்­ளார்.

"சீனா இது­போன்ற முயற்­சி­யில் ஈடு­ப­டு­வது இது முதல் முறை­யல்ல. இதனை ஏற்க முடி­யாது. இந்­தி­யா­வில் இருந்து கைப்பற்ற முடியாத பகுதியாக இமா­ச­லம் நீடிக்­கும். புதி­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பெயர்­களை சூட்­டுவதால் உண்­மையை மாற்ற முடி­யாது," எனக் கூறியுள்­ளார்.