அரிசி திருடிய இளையரை அடித்துக் கொன்ற 13 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

அரிசி திருடிய இளையரை அடித்துக் கொன்ற 13 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

1 mins read
6d739d75-bc1d-408b-9e46-7c3748cecd5d
-

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் அரிசி திரு­டி­ய­தா­கக் கூறி இளை­யர் ஒரு­வர் அடித்­துக் கொல்­லப்­பட்ட வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட 13 பேருக்கு ஏழு ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதித்து சிறப்பு நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பழங்­குடி இனத்­தைச் சேர்ந்த மது என்ற இளை­யர் அட்­டப்­பாடி பகு­தி­யில் உள்ள கடை ஒன்­றில் அரி­சி­யைத் திரு­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து, அப்­ப­குதி மக்­கள் இளை­யர் மதுவை சர­மா­ரி­யாக அடித்து உதைத்­த­னர். காவல்­துறை அவரை மீட்டு மருத்து­வ­ம­னைக்கு கொண்டு சென்றும் பய­னில்லை. மது இறந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, மதுவை பலர் அடித்து சித்­தி­ர­வதை செய்­யும் காணொ­ளிப் பதி­வு­கள் சமூக ஊட­கங்­களில் பர­வி­யது. நிரா­த­வ­ரான நிலை­யில் ஒரு­வர் உயி­ருக்­குப் போரா­டு­வ­தைக் கண்­டு­கொள்­ளா­மல் சிலர் மயக்க நிலை­யில் கிடந்த மது­வு­டன் செல்ஃபி படம் எடுத்­துக்­கொண்­ட­தும் அம்­ப­ல­மா­னது.

இளை­யர் மது­வின் உடலை மருத்­து­வர்­கள் உடல்­கூ­ராய்வு செய்­த­போது, அவ­ரது வயிற்­றில் ஒரு துளி உண­வு­கூட காணப்­ப­ட­வில்லை என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

இச்­சம்­ப­வம் தொடர்­பாக 16 பேர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்டு மூவா­யி­ரம் பக்­கங்­கள் அடங்­கிய குற்­றப்­பத்­தி­ரி­கை­யும் சிறப்பு நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

நான்கு ஆண்­டு­க­ளாக நீடித்து வந்த விசா­ர­ணை­யின் முடி­வில், குற்­றம்­சாட்­டப்­பட்ட 16 பேரில் 14 பேர் குற்­ற­வா­ளி­கள் என நீதி­ப­தி­கள் நேற்று முன்­தி­னம் அறி­வித்­த­னர். இந்­நி­லை­யில், அவர்­களில் 13 பேருக்கு ஏழு ஆண்டு கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.