பெங்களூரு: கோழிக்கறியை ருசி பார்ப்பதற்காக தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா தாலுகா குட்டிகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீனா. சம்பவத்தன்று கோழிக்கறி சமைத்துவிட்டு வெளியே சென்ற ஷீனா மீண்டும் வீடு திரும்பியபோது அதனை மகன் சிவராம், 32, சாப்பிட்டதாகத் தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஷீனா தனது மகனை கட்டையால் அடித்துள்ளார். பலத்த காயமடைந்த சிவராம் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஷீனாவை கைது செய்தனர். கொலையுண்ட சிவராமுக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

