தேஜ்பூர்: அதிபர் திரௌபதி முர்மு, தமது அசாம் மாநில சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக நேற்று தேஜ்பூர் விமானப்படை நிலையத்துக்குச் சென்றார். ராணுவ உடையில் இருந்த அவர், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் 30 எம்கேஐ ரகப் போர் விமானத்தில் பயணம் செய்தார்.
இருவர் மட்டும் அமரக்கூடிய அவ்விமானத்தை கேப்டன் நவீன்குமார் திவாரி இயக்கினார்.
ராணுவ பலத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டவும் முப்படைகளை ஆய்வு செய்யும் வகையிலும் அதிபர் இத்தகைய போர் விமானங்களில் பயணம் செய்வது இந்தியாவில் வழக்கம்.
இத்தகைய பயணம் மேற்கொண்ட இரண்டாவது பெண் அதிபர் திரௌபதி முர்மு. சுகோய் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் அதிபர் என்ற பெருமை முன்னாள் அதிபர் பிரதீபா பாட்டீலைச் சாரும்.

