உகாண்டா, மொசாம்பிக் நாடுகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்

1 mins read
dab15394-9c21-46de-a630-00c8da7c295d
-

புது­டெல்லி: இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் இன்று தொடங்கி 3 நாள்­க­ளுக்கு உகாண்டா நாட்­டில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­கி­றார். இந்­தப் பய­ணத்­தில் உகாண்டா வெளி­யு­றவு அமைச்­சர் ஜேஜே ஒடாங்­காவை அவர் சந்­தித்துப் பேசு­ கி­றார்.

உகாண்­டா­வின் இதர அமைச்­சர்­க­ளை­யும் அவர் சந்­திக்­க­வி­ருக்­கி­றார்.

இரு நாடு­க­ளுக்கு இடையே இரு தரப்பு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்று கையெ­ழுத்­தா­கும் என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சின் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உகாண்­டா­வில் வர்த்­தக மற்­றும் தொழில்­துறை சமூ­கத்­தி­னர் கூட்­டத்­தில் மத்­திய அமைச்­சர் ஜெய்­சங்­கர் உரை­யாற்­று­கி­றார். மேலும் இந்­திய வம்­சா­ வ­ளி­யி­ன­ரு­ட­னும் அவர் உரை­யா­டு­கி­றார்.

இதை­ய­டுத்து வரு­கிற 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாள்­கள் மொசாம்­பிக் நாட்­டில் அவர் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­கி­றார். மொசாம்­பிக் குடி­ய­ரசு நாட்­டுக்­குச் செல்­லும் முதல் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மொசாம்­பிக்­கில் அந்­நாட்­டின் வெளி­யு­றவு அமைச்­சர் உள்­ளிட்­ட­வர்­களை அவர் சந்­திக்­கி­றார்.

மொசாம்­பிக்­கில் உள்ள இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரு­ட­னும் அவர் உரை­யா­ட­வி­ருக்­கி­றார்.

உகாண்டா மற்­றும் மொசாம்­பிக் நாடு­களில் மேற்­கொள்­ளும் அமைச்சர் ஜெய்­சங்­க­ரின் பய­ணத்­தி­னால் இரு நாடு­க­ளு­ட­னான இரு­த­ரப்பு உற­வு­கள் வலுப்­படும் என எதிர்­பார்க்­கப் ­ப­டு­கிறது.