ராஜஸ்தானில் சச்சின் பைலட் உண்ணாவிரதம்

ராஜஸ்தானில் சச்சின் பைலட் உண்ணாவிரதம்

2 mins read
493b9fae-e2c8-4695-b895-d11267ebf6a3
-

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தா­னில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் ஆட்சி நடந்து வரு­கிறது.

இவ­ருக்­கும் காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான சச்­சின் பைலட்­டுக்­கும் இடையே நீண்­ட­கா­ல­மாக பனிப்­போர் நிலவி வரு­கிறது. இவர்­க­ளுக்கு மோத­ல் ஏற்­ப­டும்­போ­தெல்­லாம் காங்­கி­ரஸ் கட்சி மேலி­டம் தலை­யிட்டு இரு­வ­ரை­யும் சம­ர­சம் செய்து வந்­தது.

தற்­பொ­ழுது மோத­லின் உச்­ச­கட்­ட­மாக அசோக் கெலாட் அர­சுக்கு எதி­ராக சச்­சின் பைலட் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நேற்­றுத் தொடர்ந்­தார்.

இதில் திரு பைலட் முந்­தைய வசுந்­த­ரா­ராஜே சிந்­தியா தலை­மை­யி­லான பார­திய ஜனதா ஆட்­சி­யில் நடந்த ஊழல்­கள் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்க தற்­போ­தைய அரசு தவறி விட்­டது என்­றும் இதில் 2018ஆம் ஆண்டு சட்­ட­சபை தேர்­த­லின்­போது பொது­மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியைப் பூர்த்தி செய்ய வேண்­டி­யது காங்­கி­ர­சின் கடமை என்­றும் கூறி இந்த போராட்­டத்­தில் ஈடு­படப் போவ­தாக சச்­சின் பைலட் தெரி­வித்­தார். அவரை சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் கட்சி மேலி­டம் எடுத்த முயற்­சிக்கு எந்­தப் பல­னும் கிடைக்­க­வில்லை. தான் அறி­வித்­த­படி ராஜஸ்­தான் மாநி­லம் ஜெய்ப்­பூ­ரில் நேற்று சச்­சின் பைலட் ஒரு­நாள் அடை­யாள உண்­ணா­வி­ர­தம் மேற்­கொண்­டார். இந்­தப் போராட்­டத்­தில் பைலட்­டின் ஆத­ர­வா­ளர்­களும் கலந்துகொண்­ட­னர்.

ராஜஸ்­தான் மாநி­லத்­தில் இந்த ஆண்டு இறு­தி­யில் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில் ஆளும் காங்­கி­ரஸ் அர­சுக்கு எதி­ராக அக்­கட்­சியை சேர்ந்த மூத்த தலை­வரே போராட்­டத்­தில் இறங்­கி­யுள்­ளது காங்­கி­ர­சுக்குப் பெரும் தலை­வ­லியை கொடுத்து உள்­ளது.

இந்­நி­லை­யில், ராஜஸ்­தா­னில் காங்­கி­ரஸ் கட்­சிக்குப் பொறுப்­பா­ள­ராக இ­ருக்­கும் சுக்­ஜிந்­தர் சிங் அமை­தி­யாக இருக்­கும்­படி சச்­சின் பைலட்டை கேட்­டுக்­கொண்­டுள்­ளார். பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண பேச்­சுா­வார்த்­தைக்­கும் அவரை அழைத்­துள்­ளார் சுக்­ஜிந்­தர்.

முன்­ன­தாக, இந்த உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்தைக் கட்­சிக்கு எதி­ரான ஒன்று என காங்­கி­ரஸ் கட்சி வர்­ணித்­தி­ருந்­தது.

ராஜஸ்­தா­னில் முந்­தைய பாஜக ஆட்­சிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி சச்­சின் போராட்­டத்தை துவங்­கி­யி­ருந்­தா­லும் இது உண்­மை­யில் முதல்­வர் கெலாட்­டுக்கு எதி­ரான போராட் ­ட­மா­கவே அரசியல் கவனிப்பாளர் களால் பார்க்­கப்­ப­டு­கிறது.