பெங்களுர்: கர்நாடக சட்டசபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கடந்த 6 மாதங்களாக தயாராகி வருகின்றன. எனினும், ஆளும் பா.ஜனதா இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. அக்கட்சி கடந்த சில நாள்களாக டெல்லியில் வேட்பாளர் பட்டியல் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 166 தொகுதிகளுக்கும் ஜனதா தளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியாமல் இரண்டு கட்சிகளும் திணறுவதாகக் கூறப்
படுகிறது. இதில் கடும் போட்டி நிலவுவதால், யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்று முடிவு எடுப் பதில் இரு கட்சிகளும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
பா.ஜனதா கட்சி தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ளவர்களில் 15க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப் பளிக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் வேட்பாளர் பட்டியலை அறிவித்தால் அவர்கள் கட்சிக்கு எதிராக போராடும் பட்சத்தில், அது சிக்கலை ஏற்படுத்தக்கூடும். காங்கிரஸ் கட்சி, கோலார், புலிகேசி
நகர், சி.வி.ராமன்நகர் போன்ற சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
ஜனதா தளம்(எஸ்) கட்சியில் ஹாசன் தொகுதியில் பவானி ரேவண்ணாவுக்கு அவரது கணவர் ரேவண்ணா வாய்ப்புக் கேட்டு வருகிறார். இதை அவரது சகோதரர், முன்னாள் முதல்வர் குமாரசாமி, எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. வேட்புமனு தாக்கல் நாள் நெருங்கும் நிலையில் வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன.

