71,000 பேருக்கு அரசு வேலை

71,000 பேருக்கு அரசு வேலை

1 mins read
1f6d88dd-9b9f-4ef6-9146-74fef4d8d4f5
-

புது­டெல்லி: 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­பாக 10 லட்­சம் பேருக்கு மத்­திய அர­சின் பல்­வேறு துறை­களில் வேலை­வாய்ப்பு வழங்­கும் திட்­டத்தை பிர­த­மர் மோடி செயல்­ப­டுத்தி வரு­கி­றார்.

'ரோஜ்­கார்' என்று அழைக்­கப்­படும் இந்­தத் திட்­டத்தை 2022 அக்­டோ­பர் 22ஆம் தேதி தொடங்கி வைத்­த­போது அவர் மத்­திய அர­சின் பல்­வேறு துறை­களில் 75,000 பேருக்கு வேலை வழங்­கு­வ­தற்­கான பணி நிய­மன உத்­த­ரவை வழங்­கி­னார். இந்­தத் திட்­டம் இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டம் வர­வேற்­பைப் பெற்று வரு­கிறது. இந்­தத் திட்­டத்­தின்­கீழ் ஒவ்­வொரு முறை­யும் 70,000க்கும் மேற்­பட்­டோர் மத்­திய அர­சில் வேலை­வாய்ப்­பைப் பெற்று வரு­கி­றார்­கள்.

பிர­த­மர் மோடி, இன்று (ஏப்­ரல் 13) காணொளி வாயி­லாக நடை­பெ­றும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று மேலும் 71,000 பேருக்கு மத்­திய அர­சில் பணி­யாற்­று­வ­தற்­கான பணி நிய­மன உத்­த­ரவை வழங்க இருக்­கி­றார்.

புதி­தாக பணி நிய­ம­னம் செய்­யப்­ப­டு­கி­ற­வர்­கள், 'கர்­ம­யோகி பிர­ராம்ப்' என்­கிற இணைய வாயி­லான பயிற்­சித் திட்­டம் மூலம் பயிற்சி பெற்ற பின்­னர் வேலை­யைத் தொடங்க வேண்­டும். இந்­தப் பயிற்­சி­யில் அரசு ஊழி­யர்­க­ளுக்­கான நடத்தை விதி­கள், மனி­த­வ­ளக் கொள்­கை­கள் உள்­ளிட்ட பல அம்­சங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.