சபரிமலை விமான நிலைய பணி தொடங்கியது

சபரிமலை விமான நிலைய பணி தொடங்கியது

1 mins read
27c1e52e-1963-43df-9dd5-c642ff3edff3
-

திரு­வ­னந்­த­பு­ரம்: சப­ரி­மலை ஐயப்­பன் கோவி­லுக்கு ஒவ்­வோர் ஆண்­டும் லட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் வந்து செல்­வ­தால் கோவில் அமைந்­துள்ள பதனம்­திட்டா மாவட்­டத்­தில் விமான நிலை­யம் அமைக்க கேரள மாநில அரசு முயற்சி எடுத்­தது.

அதற்­கான நிலத்­தை­யும் தேர்வு செய்து அதன் விவ­ரங்­களை மத்­திய விமா­னப் போக்கு­வ­ரத்து அமைச்­சுக்கு கேரள அரசு அனுப்பி வைத்­தது.

இதை­ய­டுத்து மத்­திய விமான போக்­கு­வ­ரத்து துறை அதி­கா­ரி­கள், சுற்­றுச்­சூ­ழல் துறை­யி­னர் முதற் கட்ட ஆய்­வுப் பணி­கள் மேற்­கொண்­ட­னர். அத­னைத் தொடர்ந்து சப­ரி­ம­லை­யில் விமான நிலை­யம் அமைக்க மத்­திய அர­சின் அனு­மதி கிடைத்­துள்­ள­தாக தற்­போது தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதற்­கான அறி­விப்பை கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் வெளி­யிட்­டார்.

அவர் கூறு­கை­யில், "சப­ரி­மலை­யில் புதிய விமான நிலை­யம் அமைக்க தேவை­யான அனு­மதி கிடைத்­துள்­ளதால் அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கி விட்டன. நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டதால் கட்­டு­மா­னப் பணி­கள் விரைவில் தொடங்கும். பதனம்­திட்டா மாவட்­ட வளர்ச்­சிக்கு ஊக்கம் அளிக்­கும் வகை­யில் மாநில அர­சின் 100 நாள் திட்­டத்­தின்கீழ் இங்கு புதிய சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார்.