கணவரைக் கடித்த முதலை; உடனடியாக காப்பாற்றிய மனைவி

1 mins read
ae5748a0-276e-4277-bee6-76c0dee92020
-

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தான் மாநி­லத்­தில் உள்ள கர­வுலி மாவட்­டத்­தில் உள்ள மந்­த­ரா­யல் பகு­தி­யில் பன்னே சிங் என்ற நபர் தமது மனைவி விமல் பாயு­டன் வசித்து வரு­கி­றார். பன்னே சிங் ஆடு­கள் மேய்த்து பிழைப்பு நடத்தி வரு­ப­வர்.

இவர் சில நாட்­க­ளுக்கு முன்­னர், மனை­வி­யு­டன் தங்­கள் ஆடு­க­ளுக்குத் தண்­ணீர் கொடுக்க சம்­பல் ஆற்­றுக்­குச் சென்­றார்.

பன்னே சிங் ஆற்­றில் இறங்­கி­ய­போது, திடீ­ரென ஒரு முதலை வந்து அவ­ரது காலைக் கடித்து தண்­ணீ­ருக்­குள் இழுக்க முயன்­றது.

சற்று தொலை­வில் இருந்த விமல் பாய் கண­வ­ரின் அல­றல் சத்­தம் கேட்டு ஓடி வந்­தார். அவள் தைரி­ய­மா­கச் சென்று கண­வ­னின் காலை விடு­விப்­ப­தற்­காக முத­லை­யைத் தடி­யால் அடித்­தார்.ஆனா­லும், முதலை விட­வில்லை. இன்­னும் தண்­ணீ­ருக்­குள் இழுக்க முயன்­றது.

மேலும் தைரி­யத்­து­டன் விமல் பாய் முத­லை­யின் கண்­ணில் குச்­சி­யால் குத்­தி­னார். இத­னால், முதலை தனது பிடியை விட்டு பன்னே சிங்­கின் காலை விடு­வித்­தது.

இதை­ய­டுத்து கண­வன், மனைவி இரு­வ­ரும் பத்­தி­ர­மாக கரைக்கு வந்­த­னர்.

விமல் பாயின் சாகசத்திற்குப் பலரும் பாராட்டுத் தெரித்து வரு கின்றனர்.