'சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை இந்தியாவால் எதிர்கொள்ள முடியும்'

'சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை இந்தியாவால் எதிர்கொள்ள முடியும்'

1 mins read
bc56ef7f-d581-4816-8c2f-2e80bccff238
-

கம்­பாலா: உகாண்டா நாட்­டுக்கு இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் கடந்த 10ஆம் தேதி புறப்­பட்­டுச் சென்­றார். அந்­நாட்­டில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்ட அவர் இந்­திய சமூ­கத்­தி­னர் முன் உரை­யாற்­றி­னார்.

அவர் பேசும்­போது, புதிய இந்­தியா உரு­வாகி வரு­வது பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யா­விற்கு எதி­ராக பல்­லாண்­டு­க­ளாக எல்லை கடந்த பயங்­க­ர­வா­தத்­தில் ஈடு­பட்ட சக்­தி­க­ளுக்கு தற்­போது உள்ள இந்­தியா வேறு­பட்­டது என்­றும் நாம் புரிய வைத்­துள்­ளோம்.

அந்­தச் சக்­தி­க­ளுக்கு நாம் சரி­யான பதி­லடி கொடுப்­போம் என்­றும் தற்­போது தெரிந்­தி­ருக்­கும் என்­றார் திரு ஜெய்­சங்­கர். உரி அல்­லது பால­கோட் என நாட்டின் பாது­காப்புச் சவால்­களை எதிர்­கொள்­ளும் வேறு­பட்ட இந்­தி­யாவை மக்­கள் இன்று பார்க்­கின்­ற­னர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு உரி பகு­தி­யில் இந்­திய ராணுவ தலை­மை­ய­கத்­திற்கு எதி­ராக பாகிஸ்­தா­னில் இருந்து ஜெய்ஷ்-இ-முக­மது பயங்­க­ர­வாத இயக்­கத்­தி­னர் ஊடு­ருவி தாக்­கு­தல் நடத்­திய நிகழ்­வை­யும் 2019ஆம் ஆண்­டில் பாகிஸ்­தா­னில் உள்ள பால­கோட் நக­ரில் பயங்­க­ர­வாத முகாம் மீது இந்­திய விமா­னங்­கள் தாக்­கு­தல் நடத்­திய நிகழ்­வை­யும் அவர் சுட்­டி­னார்.

கடந்த 30 ஆண்­டு­க­ளாக ஒப்­பந்­தங்­களை மீறி பெரும் படை­களை சீனா குவித்து வந்­துள்­ளது.

ஆனால், இன்று இந்­திய ராணுவ வீரர்­கள் மிக உயர்ந்த பகு­தி­களில், கடுங் குளி­ரி­லும் திர­ளா­கப் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருப்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

எனி­னும், எல்­லைப் பகு­தி­களில் உள்­கட்­ட­மைப்பை இன்­னும் மேம்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­தை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.