உக்ரேன் மருத்துவ மாணவர்கள்: இந்தியா சலுகை

உக்ரேன் மருத்துவ மாணவர்கள்: இந்தியா சலுகை

2 mins read
62f58235-eadb-4e65-be82-335cdf591919
-

புது­டெல்லி: போரி­னால் உக்­ரே­னில் படிப்­பைத் தொடர முடி­யாத இந்­திய மருத்­துவ மாண­வர்­கள், இந்­தி­யா­வில் தகு­தித் தேர்­வினை எழுத அனு­மதி வழங்­கப்­படும் என்று உக்­ரேன் அறி­வித்­துள்­ளது.

உக்­ரே­னில் ஏறத்­தாழ 20 ஆயி­ரம் இந்­திய மாண­வர்­கள் மருத்­துவ பட்­டப்­ப­டிப்பு படித்து வந்­த­னர்.

அங்கு கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்­த­தைத் தொடர்ந்து, பதற்­ற­மான சூழ்­நிலை உரு­வா­னது. அதைத் தொடர்ந்து இந்­திய மாண­வர்­கள் அங்கு தங்­கள் மருத்­துவ படிப்­பைத் தொடர முடி­யாத சூழல் உரு­வா­னது.

அந்த மாண­வர்­களை இந்­தி­யா­வுக்கு பத்­தி­ர­மா­கத் திரும்ப அழைத்து வரு­வதே பெரும் சவா­லா­னது. பின்­னர் நாடு திரும்­பி­விட்ட அந்த மாண­வர்­கள், தங்­கள் மருத்­து­வப் படிப்பை தொடர முடி­யாத சூழல் உரு­வா­ன­தால் அவர்­க­ளின் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­னது.

இது தொடர்­பாக உச்ச நீதி­மன்­றத்­தில் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­கள் தரப்­பில் ஒரு வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

அப்­போது, உக்­ரே­னில் படிப்­பைத் தொடர முடி­யாத இந்­திய மாண­வர்­க­ளுக்கு அரசு உதவ வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றம் கேட்­டுக்­கொண்­டது. இந்தப் பின்னணியில் தற்பொழுது உக்­ரே­னில் மருத்­து­வம் படித்த மாண­வர்­கள் இறுதி ஆண்டுத் தேர்­வு எழுத இந்­தி­யா­வில் ஒரு­முறை வாய்ப்புத் தரப்­படும் என உச்ச நீதி­மன்­றத்­தில் மத்­திய அரசு அண்மையில் அறி­வித்­தது.

இந்­நி­லை­யில், உக்­ரேன் துணை வெளி­யு­றவு அமைச்சர் எமின் தப­ரோவா இந்­தி­யா­வில் 3 நாள் பய­ணம் மேற்­கொண்­டார். அவர் இந்­திய வெளி­யு­ற­வுச் செய­லா­ளர் சஞ்­சய் வர்­மா­வு­டன் அண்­மை­யில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். இந்­தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது, உக்­ரே­னில் மருத்­துவ படிப்­பைத் தொடர முடி­யா­மல் போன இந்­தியா உள்­ளிட்ட வெளி­நாட்டு மாண­வர்­கள், தங்­கள் நாட்­டில் ஒருங்­கி­ணைந்த தகு­தித்­தேர்­வினை எழு­து­வ­தற்கு உக்­ரேன் அனு­ம­திக்­கும் என்று தெரி­வித்­தார்.

இதை இந்­திய வெளி­யு­றவு அமைச்­ச­கம் ஒரு அறிக்கை மூலம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தச் சலு­கை­யால், உக்­ரே­னில் மருத்­து­வம் படித்து வந்த ஏறத்­தாழ 20 ஆயி­ரம் இந்­திய மருத்­துவ மாண­வர்­களும் பலன் பெறு­வார்­கள் என்­பது குறிப் பிடத்தக்­கது.