அமித் ஷா வருகைக்கு முன்னர் 3,400 வெடிபொருள்கள் பறிமுதல்

அமித் ஷா வருகைக்கு முன்னர் 3,400 வெடிபொருள்கள் பறிமுதல்

1 mins read
b97291b7-fef9-4a37-8565-ebfbb4ff8d21
-

கோல்­கத்தா: இந்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா நேற்று மேற்­கு­வங்க மாநி­லத்­தின் பிர்­பூம் மாவட்­டத்­தில் கலா­சார நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொள்­ளத் திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

வங்­கா­ளப் புத்­தாண்டை முன்­னிட்டு அந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அமைச்­ச­ரின் வரு­கைக்கு முன்­பாக அந்­தப் பகு­தி­யில் இருந்து 3,400 வெடி­பொ­ருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பிர்­பூம் மாவட்­டத்­தின் குஸ்­லாரா பகு­தி­யில் உள்ள புற வழிச் சாலை­யில் ஒரு செங்­கல் சூளை அருகே மர்­ம­மான முறை­யில் கார் ஒன்று நிறுத்திவைக்­கப்­பட்­டி­ருந்­தது.

காவல்­து­றை­யி­னர் அதைச் சோதித்­த­போது காருக்­குள் வெடி­பொ­ருள்­கள் நிரம்­பிய 17 பெட்­டி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. ஒவ்­வொரு பெட்­டி­யி­லும் 200 வெடி­பொ­ருள்­கள் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து வெடி­பொ­ருளை செய­லி­ழக்­கச் செய்­யும் வல்­லு­நர் குழு சம்­பவ இடத்­திற்கு அனுப்­பப்­பட்­டது.

காவல்­து­றை­யி­னர் அந்த காரை கைப்­பற்­றி­யுள்­ள­னர். சிறப்­புப் படை­யி­னர் அது குறித்த விசா­ர­ணையை முடுக்கி விட்­டுள்­ள­னர்.

இந்த வழக்­கில் நேற்று மாலை நில­வ­ரப்­படி யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், மக­மது பஜார் பகு­தி­யில் நடத்­திய சோத­னை­யில் 81,000 வெடி­பொ­ருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. அது­கு­றித்த விசா­ரணை முடி­வு­றாத நிலை­யில் நேற்று வெடி­பொ­ருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.