மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 13 பேர் கொல் லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் புனே-மும்பை நெடுஞ்சாலையில் ஷிங்ரோபா கோயில் அருகே பேருந்து விபத்தில் சிக்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கை நோக்கி பேருந்து சரிந்தது. இதில் இசைக் குழுவைச் சேர்ந்த 41 பேர் பயணம் செய்தனர்.
"காபோலி பகுதியில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேர் மாண்டனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன," என்று நேற்று காலை ராய்காட் காவல் அதிகாரி சோம்நாத் கார்கே இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்தார்.
சம்பவத்துக்குப் பிறகு பலி எண்ணிக்கை 13க்கு அதிகரித்தது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த துரதிர்ஷ்டமான விபத்து குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," என்று தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.
"விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றும் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.
பேருந்தில் பயணம் செய்த வர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்தவர்களும் காயம் அடைந்தவர்களும் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட வர்கள் எனத் தெரிகிறது. விபத்து குறித்து கோபோலி காவல்துறை விசாரித்து வருகிறது.

