பிரதமர் மோடிக்கு சிறுமி கோரிக்கை; பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும்

பிரதமர் மோடிக்கு சிறுமி கோரிக்கை; பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும்

1 mins read
1a5a6274-25dc-486d-9d81-3a051b8f4dba
-

ஸ்ரீந­கர்: ஜம்மு காஷ்­மீ­ரில் வசிக்­கும் சிறுமி, பள்­ளிக்­கூ­டம் கட்­டித் தர வேண்­டும் என்று பிர­த­மர் மோடிக்­குக் கோரிக்கை விடுத்து உள்­ளார்.

கத்துவா மாவட்­டத்­தில் லோஹாய்-மல்­ஹர் கிரா­மத்தை சேர்ந்த சிறுமி சீரத்­நாஸ், தனது கோரிக்கையை காணொ­ளி­யா­கப் பதிவு செய்து பேஸ்­புக்­கில் வெளி­யிட்­டுள்­ளார்.

"மோடிஜி, நான் இங்கு அரசுப் பள்­ளி­யில் படித்து வரு­கி­றேன். தயவுசெய்து எங்­க­ளுக்கு ஒரு நல்ல பள்­ளிக்­கூ­டத்தை கட்டி தாருங்­கள்.

"தரை எவ்­வ­ளவு அழுக்­காக இருக்­கிறது என்று பாருங்­கள். எங்­களை இங்­கே­தான் உட்­கார வைக்­கி­றார்­கள்.

"எங்­கள் பள்ளி இருக்­கும் பெரிய கட்­ட­டத்தை உங்­க­ளுக்கு காட்­டு­கி­றேன். இந்தக் கட்­ட­டம் 5 வரு­டங்­க­ளாக அழுக்­காக இருக்­கிறது. தரை­யில் உட்­கார்ந்­தால் எங்­க­ளு­டைய சீரு­டை­கள் அழுக்­காகி விடு­கிறது.

"சீருடை அழுக்­கா­கி­விட்­டால் அம்மா எங்­களை அடிக்­கி­றார். தயவு செய்து மோடிஜி பள்­ளி­யின் உட்­கட்­ட­மைப்பை அழ­காக கட்டி கொடுங்­கள் என உங்­க­ளி­டம் கேட்டுக் கொள்­கி­றேன்," என்று காணொ­ளிப் பதி­வில் சிறுமி பேசி­யுள்­ளார்.

இந்த காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பார்க்­கப்­பட்டு வரு­கிறது.

ஏறக்­கு­றைய 20 லட்­சம் பேருக்கு மேல் காணொ­ளி­யைப் பார்த்­துள்­ள­னர்.