புதுடெல்லி: டெல்லியில் ஜசோலா மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்கியில் சென்ற பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைதாகியுள்ளார்.
ராஜேஷ் குமார், வயது 26, என்ற அந்த நபர் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி மெட்ரோ ரயிலில் ஏற வந்த ராஜேஷ் குமார், மின்தூக்கியில் பெண் தனியாக இருப்பதைப் பார்த்து தவறான செய்கை காட்டி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் ரயிலில் செல்லாமல் வெளியேறி விட்டார். கண்காணிப்புக் கேம ராவை ஆராய்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

