தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபானக் கொள்கை முறைகேடு: கெஜ்ரிவாலிடம் விசாரணை

2 mins read
c8d86410-1d82-4a7c-bf41-19291e01bdf9
-

சிபிஐ தலைமையகத்தில் முன்னிலையான டெல்லி முதல்வர்

புது­டெல்லி: மது­பானக் கொள்கை முறை­கேடு தொடர்­பாக டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வா­லி­டம் சிபிஐ அதி­கா­ரி­கள் நேற்று விசா­ரணை மேற்­கொண்­ட­னர். விசா­ர­ணை­யின் முடி­வில் அவர் கைது செய்­யப்­பட வாய்ப்­புள்­ள­தா­கப் பர­விய, உறுதி செய்­யப்­ப­டாத தக­வ­லால் அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பு நில­வி­யது.

புதிய மது­பானக் கொள்கை முறை­கேட்­டால் டெல்லி அர­சுக்கு பெரும் வரு­வாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக சிபிஐ சாடி­யுள்­ளது. இதை­ய­டுத்து சிபி­ஐ­யின் அழைப்­பா­ணையை ஏற்று, நேற்று அதன் தலை­மை­ய­கத்­தில் நடை­பெற்ற விசா­ர­ணைக்கு நேரில் முன்­னி­லை­யா­னார் டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால்.

இந்த முறை­கேடு தொடர்­பாக டெல்லி துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்டு அவ­ரி­டம் விசா­ர­ணை­யும் நடந்து வரு­கிறது. சிபிஐ மேற்­கொண்ட கைது நட­வ­டிக்­கையை அடுத்து, மணிஷ் சிசோ­டியா துணை முதல்­வர், அமைச்­சர் பத­வி­களில் இருந்து வில­கி­னார்.

இந்த முறை­கேடு கார­ண­மாக டெல்லி அர­சுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்­பட்­டுள்­ளது என்­பது சிபி­ஐ­யின் குற்­றச்­சாட்­டா­கும்.

இத­னி­டையே, இந்த முறை­கேட்­டில் தெலுங்­கானா முதல்­வ­ரின் மகளும் தெலங்­கானா சட்ட மேலவை உறுப்­பி­ன­ரு­மான கவி­தா­வுக்­கும் தொடர்­புள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது.

அதை­ய­டுத்து அவ­ரும் சிபிஐ விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளார். மேலும் மத்­திய அம­லாக்­கத்­துறை­யும் அவ­ரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில், டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வா­லி­ட­மும் சிபிஐ நேற்று விசா­ரணை நடத்தி உள்­ளது. அவரை மத்­திய அரசு குறி வைத்­துள்­ள­தாக ஆம் ஆத்மி கட்­சித் தலை­வர்­கள் சாடி­யுள்­ள­னர்.

நேற்று விசா­ர­ணைக்­குச் செல்­லும் முன்­னர் காணொளி ஒன்றை வெளி­யிட்­டார் முதல்­வர் கெஜ்­ரி­வால். அதில் சிபிஐ மிக­வும் சக்­தி­வாய்ந்த அமைப்பு என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"என்­னைக் கைது செய்ய வேண்­டும் என பாஜக சொன்­னால் சிபிஐ அதைச் செய்­யும். சிபிஐ நினைத்­தால் யாரை வேண்­டு­மா­னா­லும் சிறைக்கு அனுப்ப முடி­யும்," என்று முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே, டெல்­லி­யில் உள்ள சிபிஐ தலை­மை­ய­கத்­துக்கு நேற்று பலத்த பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்­தது. மேலும் தலை­மை­ய­கத்­தைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் 144 தடை உத்­த­ர­வும் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சிபிஐ தலைமையகத்துக்குச் செல்லும் முன்னர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் கெஜ்ரிவால்.

இதற்கிடையே, முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் நேற்று மாலை டெல்லியில் சந்தித்துப் பேசினர்.

அப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது. இதனால் டெல்லியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன.