தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கிரிப்டோ தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை'

1 mins read
71ff1fd1-c17f-46bd-9007-29a90c818e61
-

வாஷிங்­டன்: மின்­னி­லக்­கப் பணம் எனப்­படும் 'கிரிப்டோ கரன்சி' தொடர்­பான பிரச்­சி­னை­களில் உலக நாடு­கள் கவ­னம் செலுத்த வேண்­டும் என மத்­திய நிதி­அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இவ்விவ­கா­ரம் ஜி20 நாடு­க­ளி­டையே முக்­கிய விவா­தப் பொரு­ளாக உரு­வெ­டுத்­துள்­ள­தாக வாஷிங்­ட­னில், 'கிரிப்டோ சொத்­துக­ளின் தாக்­கங்­கள்' என்ற தலைப்­பில் நடந்த கூட்­ட­டத்­தில் பேசும்போது அவர் குறிப்­பிட்­டார்.

இத்துறையை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான அவ­ச­ரம் குறித்து உறுப்பு நாடு­க­ளி­டையே ஒரு­மித்த கருத்து உள்­ள­தா­கத் தெரி­வித்த அவர், கொள்கை, ஒழுங்­கு­முறை கட்­ட­மைப்­பின் முக்­கிய கூறு­களை வெளிக்­கொ­ணர்­வ­தில் அனைத்­து­லக நாணய நிதி­யம், நிதி நிலைத்­தன்மை வாரி­யம் ஆகி­யற்­றின் பணியை ஜி20 அங்­கீ­க­ரிக்­கிறது என்­றார்.

"வளர்ந்து வரும் சந்­தை­கள், வள­ரும் பொரு­ளா­தா­ரங்­கள் உள்­பட முழு அள­வி­லான அபா­யங்­களை உலக நாடு­கள் கருத்­தில் கொள்ள வேண்­டும். மின்­னி­லக்க பணம் சார்ந்த சொத்­துக்­கள் தொடர்­பான எந்­த­வொரு புதிய விதி­மு­றை­களும் உல­க­ள­வில் ஒருங்­கி­ணைக்­கப்­பட வேண்­டும்," என்­றார் அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன்.