பீகாரில் விஷச் சாராயத்துக்கு 20 பேர் பலி

பீகாரில் விஷச் சாராயத்துக்கு 20 பேர் பலி

1 mins read
0a69a23d-6188-47f6-b9e8-73997add1f27
-

பாட்னா: விஷ சாரா­யம் அருந்­திய இரு­பது பேர் பலி­யான சம்­ப­வம் பீகா­ரில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. மேலும் பலர் மருத்துவ மனை­களில் உயி­ருக்­குப் போராடி வரு­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் கிழக்கு சாம்­பா­ரான் மாவட்­டத்­தில் இந்தத் துய­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

அங்­குள்ள லட்­சு­மி­பூர், முஷார் தோலி உள்­ளிட்ட சிற்­றூர்­க­ளைச் சேர்ந்த சில­ருக்கு திடீ­ரென உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. வயிற்­றுப்­போக்கு, வாந்தி, மயக்­கம் உள்­ளி்ட்ட பாதிப்­பு­களை அடுத்து அனை­வ­ரும் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

எனி­னும் 24 மணி நேரத்­துக்­குள் குறைந்­த­பட்­சம் இரு­பது பேர் சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இந்­நி­லை­யில் அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரித்­தது.

காவல்­துறை மேற்­கொண்ட முதற்­கட்ட விசா­ர­ணை­யின் மூலம் பாதிக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ருமே விஷ சாரா­யம் அருந்­தி­யது தெரி­ய­வந்­தது. இது­கு­றித்து விசா­ரணை நடத்த கலால்­துறை அதி­காரி தலை­மை­யில் தனிப்­படை ஒன்று சம்­ப­வம் நிகழ்ந்த சிற்­றூர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

காவல்­துறை விசா­ர­ணையை அடுத்து, விஷ சாரா­யம் காய்ச்­சிய குற்­றச்­சாட்­டின் பேரில் 12 பேர் கைதாகி உள்­ள­னர். அவர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை நடந்து வரு­கிறது.

பீகா­ரில் கள்­ளத்­த­ன­மாக சாரா­யம் காய்ச்­சு­வோர் மீது காவல்­துறை கடும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. எனி­னும் அவ்­வப்­போது விஷ சாரா­யத்தை அருந்தி பலர் உயி­ரி­ழப்­பது நீடித்து வரு­கிறது.