அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர் கைது

அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர் கைது

1 mins read
3d4f8699-c734-488e-9b5d-88990f93c719
-

சண்­டி­கர்: காவல்­து­றை­யால் தேடப்­பட்டு வரும் காலிஸ்­தான் ஆத­ர­வா­ளர் அம்­ரித்­பால் சிங்­கின் நெருங்­கிய நண்­பரைப் பஞ்­சாப் காவல்­துறை கைது செய்­துள்­ளது.

பஞ்­சாபைத் தலை­மை­யி­ட­மாகக் கொண்டு செயல்­படும், 'வாரிஸ் பஞ்­சாப் தே' என்ற சமய அமைப்­பின் தலை­வ­ரான அம்­ரித்­பால் சிங் மீது பல வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன.

அவ­ரது அமைப்­புக்கு எதி­ராக பஞ்­சாப் மாநில அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. இதை­ய­டுத்து அவ­ரைக் கைது செய்ய காவல்­துறை முயன்­ற­போது, திடீ­ரென தலை­மறை­வா­னார் அம்­ரித்­பால் சிங்.

பல இடங்­களில் தேடி­ய­போதும் அவர் சிக்­க­வில்லை. நாள்­தோ­றும் தனது தோற்­றத்தை மாற்­றிக்­கொண்டு காவல்­து­றை­யி­டம் சிக்­கா­மல் தொடர்ந்து தலை­ம­றை­வாக உள்­ளார்.

இந்­நி­லை­யில், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் அம்­ரித்­பால் சிங் பதுங்கி இருக்க அவ­ரது நெருக்­க­மான நண்­பர் ஜோகா சிங் என்­ப­வர் உத­வி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் பஞ்­சாப் காவல்­துறை அவ­ரைக் கைது செய்­தது.