ஒன்பது குண்டுகள் பாய்ந்தன

ஒன்பது குண்டுகள் பாய்ந்தன

1 mins read
aad1a3f1-3cf4-45ab-98bb-dc56659d65b6
-

பிர­யாக்­ராஜ்: முன்­னாள் சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆதிக் அக­ம­து குறைந்தது ஒன்­பது முறை சுடப்பட்டதாக உடற்­கூ­றாய்வு அறிக்கை கூறுகிறது.

பல்­வேறு குற்ற வழக்­கு­களில் தொடர்­பி­ருந்த ஆதிக் அக­ம­தும் அவர்­தம் சகோ­த­ரர் அஷ்­ரஃப் அக­ம­தும் கடுங்­கா­வல், ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்டு, சிறை­வா­சத்தை நிறை­வேற்றி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­காக இரு­வ­ரும் சனிக்­கி­ழமை பிர­யாக்­ராஜ் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். அதனை முடித்­துக்­கொண்டு வெளி­யில் வந்­த­போது செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு அவர்­கள் பதி­ல­ளித்­த­னர்.

அப்­போது செய்­தி­யா­ளர்­களின் போர்­வை­யில் இருந்த சிலர் அவர்­களை அரு­கி­லி­ருந்து சுட்­டுக்­கொன்­ற­னர். இந்­நி­கழ்வு தொலைக்­காட்­சி­யில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­னது.

இந்­நி­லை­யில், தலை­யில் ஒரு­மு­றை­யும் கழுத்து, முது­குப் பகுதி­களில் எட்டு முறை­யும் ஆதிக் சுடப்­பட்­டது உடற்­கூ­றாய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டது. அது­போல, முகத்­தில் ஒரு­முறை, முது­கில் நான்கு முறை என அஷ்­ரஃப் ஐந்து முறை சுடப்­பட்­டார்.

மருத்­து­வர் ஐவர் கொண்ட குழு­வின் உடற்­கூ­றாய்வு நட­வடிக்கை காணொ­ளி­யா­கப் பதிவு­செய்­யப்­பட்­டது. பின்­னர் சகோ­த­ரர்­கள் இரு­வ­ரின் உடல்­களும் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்ள அவர்­க­ளின் சொந்த ஊரில் புதைக்­கப்­பட்­டன.

சம்­ப­வம் தொடர்­பில், லவ்­லேஷ் திவாரி, 22, மோகித் சிங் என்ற ஷானி, 23, அருண் குமார் மௌரியா, 18 என்ற மூவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர். அம்­மூ­வ­ரும் ஏற்­கெ­னவே குற்­றப் பின்­னணி கொண்­ட­வர்­கள்.

புகழ்­பெற வேண்­டும் என்­பதற்­கா­கச் சகோ­த­ரர்­கள் இரு­வரை­யும் சுட்­டுக்­கொன்­ற­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யின்­போது அவர்­கள் கூறி­ய­தா­கக் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது. ஆனா­லும், கூலிப்­ப­டை­க­ளாக அவர்­கள் செயல்­பட்­டி­ருக்­க­லாம் என்ற கோணத்­தி­லும் காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.