தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடக தேர்தல் களத்தில் பணக்கார வேட்பாளர்கள்

2 mins read
b20bc1f6-ec49-43c9-afe5-c45b85a32c13
-

சுயேச்சை வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,662 கோடி; பரப்புரைக் களம் விழாக்கோலம்

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் இம்­முறை அதிக எண்­ணிக்­கை­யிலான கோடீஸ்­வர வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கு­கின்­ற­னர். அவர்­களில் ஆக அதி­க­மான சொத்து­களைக் கொண்­ட­வர்­கள் பட்­டி­ய­லில் பாஜக வேட்­பா­ளர் எம்­டிபி நாக­ராஜ், கர்­நா­டகா காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் டி.கே.சிவ­குமார் உள்­ளிட்ட பலர் இடம்­பிடித்­துள்­ளனர்.

கர்­நா­டக நக­ராட்சி நிர்­வாகத்­துறை அமைச்­ச­ராக உள்ள எம்டிபி நாக­ராஜ் ஒசக்­கோட்டை தொகு­தி­யில் பாஜக சார்­பில் களம் காண்­கி­றார். அவ­ரது சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி ஆகும்.

2019ஆம் ஆண்டு சட்டப்­பேரவை இடைத்­தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­போது நாக­ரா­ஜின் சொத்து மதிப்பு ரூ.1,015 கோடி­யாக இருந்­தது. இந்­நி­லை­யில் கடந்த நான்கு ஆண்­டு­களில் மட்­டும் சொத்து மதிப்பு ரூ.495 கோடி அள­வுக்கு உயர்ந்­துள்­ளது.

கர்­நா­டக காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே.சிவ­கு­மா­ருக்­கும் அவ­ரது மனை­விக்­கும் ரூ.1,347 கோடி சொத்து இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஐந்து ஆண்டு­களில் மட்­டும் இவர்­களுடைய சொத்து மதிப்பு ரூ.507 கோடி அள­வுக்கு உயர்ந்­துள்­ளது. அதே­ச­ம­­யம் இரு­வ­ருக்­கும் ரூ.260 கோடி கடன் இருப்­ப­தா­க­வும் தமது வேட்­பு­மனு­வில் டி.கே.சிவ­கு­மார் குறிப்­பிட்­டு உள்­ளார்.

பாஜக, காங்­கி­ரஸ், பிற கட்­சி­கள் சார்­பில் போட்­டி­யி­டும் மேலும் பல வேட்­பா­ளர்­கள் கோடீஸ்­வ­ரர்­களாக உள்­ள­னர்.

இத­னி­டையே, அர­சி­யல் கட்சி வேட்­பா­ளர்­களை விஞ்­சும் வகை­யில் சுயேச்சை வேட்­பா­ளர் ஒரு­வரும் கோடிக்­க­ணக்­கில் சொத்து வைத்­துள்­ளார்.

சிக்பேட்டை தொகு­தி­யில் சுயேச்சை­யா­கக் கள­மி­றங்­கும் கே.ஜி.எப்.பாபு என்­ப­வரின் மனைவி சஜியா தர­ணின் சொத்து மதிப்பு ரூ.1,662 கோடி­யா­கும். தமக்கு தொகுதி ஒதுக்­கும்­படி காங்­கி­ரஸ் கட்­சி­யி­டம் பாபு விடுத்த கோரிக்கை ஏற்­கப்­ப­ட­வில்லை.

இத­னால் தனது மனை­வியை கள­மி­றக்கி உள்­ளார். கர்­நா­ட­கத்­தில் பணக்­கார வேட்­பா­ள­ராக சஜியா உள்­ளார்.

கர்­நா­ட­கா­வில் தேர்­தல் களம் களை­கட்டத் தொடங்கி உள்­ளது. அர­சி­யல் கட்­சிப் பிர­மு­கர்­களும் தொண்­டர்­களும் தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்­டுள்­ள­னர்.

மாநி­லம் முழு­வ­தும் அமைக்­கப்­பட்­டுள்ள தேர்­தல் அலு­வ­ல­கங்­கள் விழாக்­கோ­லம் பூண்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

கட்­சித் தொண்­டர்­கள் இடையே பரப்புரையின்­போது சில மோதல்­களும் வெடித்­துள்­ளன. இதை­ய­டுத்து பதற்­றம் நில­வும் பகு­தி­களில் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்டுள்­ள­னர்.