ஜி20: 111 நாடுகளைச் சேர்ந்த 12,000 பேர் பங்கேற்பு

ஜி20: 111 நாடுகளைச் சேர்ந்த 12,000 பேர் பங்கேற்பு

1 mins read
dadc5820-18a4-4eff-a4c8-70bfce313dbc
-

புது­டெல்லி: வார­ணாசி நக­ரில் தனது நூறா­வது ஜி20 துணை மாநாட்டை நடத்தி இந்­தியா முக்கிய மைல்­கல்லை எட்­டி­யுள்­ளது என்று ஜி20 மாநாட்­டுக்­கான தலைமை ஒருங்­கி­ணைப்­பாளர் ஹர்ஷ்வர்­தன் ஷிரிங்லா தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் நேற்று முன்தினம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்­திய தலை­மை­யின் கீழான இந்த மாநாட்டுக் கூட்­டங்­களில் இது­வரை 111 நாடு­க­ளைச் சேர்ந்த 12 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட குழு­வி­ன­ர் பங்­கேற்­றுள்­ள­தாக குறிப்­பிட்­டார்.

அனைத்து கூட்­டங்­க­ளி­லும் நல்ல முறை­யில் விவா­தங்­கள் நடந்­துள்­ள­தா­க­வும் இது­வரை நூறு மாநாட்­டுக் கூட்­டங்­களை இந்­தியா நடத்தி உள்­ளது என்­றும் ஹர்ஷ்வர்­தன் தெரி­வித்­தார்.

"நாட்­டின் 28 மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­கள் என அனைத்து பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதுவரை 41 வெவ்­வேறு நக­ரங்­களில் இந்தக் கூட்­டங்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

"இந்­தி­யா­வின் சிறப்பு அழைப்­பின் பேரில் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த குழுக்­கள் மாநாட்­டுக் கூட்­டங்­களில் பங்­கேற்று வரு­கின்­றன," என்­றார் ஹர்ஷ் வர்­தன்.

நாடு முழு­வ­தும் மேலும் 60 நக­ரங்­களில் இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட கூட்­டங்­களை நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்­தார். ஜி20 அமைப்­புக்­கான தலை­மைத்­து­வத்தை இந்­தியா ஏற்­றுள்­ளது. இதை­ய­டுத்து நாடு முழு­வ­தும் அம்­மா­நாடு தொடர்­பான கூட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.