அரிசி ஆலை இடிந்து விழுந்து நால்வர் மரணம், பலர் காயம்

அரிசி ஆலை இடிந்து விழுந்து நால்வர் மரணம், பலர் காயம்

1 mins read
11f249b1-aa48-4a80-903d-308c3a139554
-

சண்­டி­கர்: அரிசி ஆலை இடிந்து விழுந்த விபத்­தில் சிக்கி ஹரி­யா­னா­வில் நான்கு பேர் உயி­ரி­ழந்­துவிட்டனர். மேலும் பலர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

மீட்­புப் பணி­கள் நடை­பெற்று வரும் நிலை­யில், பலர் இடி­பா­டு­களில் சிக்கி உள்­ள­தாக நேற்று மாலை இந்­திய ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

ஹரி­யானா மாநி­லம், கர்னல் பகு­தி­யில் உள்ள மூன்று தளங்­களைக் கொண்ட அரிசி ஆலை­யில் நேற்று அதி­காலை விபத்து ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. திடீ­ரென அந்த ஆலை இடிந்து விழுந்­தது.

அப்­போது நிறைய ஊழி­யர்­கள் பணி­யில் இருந்­துள்­ள­னர். சிலர் ஆலை­யின் ஒரு பகு­தி­யில் தூங்­கிக்கொண்டிருந்தனர். அவர்­கள் இடி­பா­டு­களில் சிக்கிக் கொண்­ட­தா­கத் தெரி­கிறது.

இடி­பா­டு­களில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டி­ய­வர்கள் உதவி கேட்டு கூக்­கு­ரல் எழுப்­பி­னர். இந்­நி­லை­யில் விபத்து குறித்து தீய­ணைப்­புத் துறைக்குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

விரைந்து வந்த தீய­ணைப்பு வீரர்­கள் நேற்று காலை முதல் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­ட­னர். இதனால் நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் இடி­பா­டு­களில் இருந்து மீட்­கப்­பட்­டனர்.

மேலும் பல பணி­யா­ளர்­கள் ஆலை­யில் இருந்து வெளி­யேற முடி­யா­மல் இடி­பா­டு­களில் சிக்கி ­இருக்கக்கூடும் எனக் கூறப்­படும் நிலை­யில், மீட்புப்பணி­கள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இந்த விபத்­தில் சிக்கி காய­ம­டைந்த இரு­பது பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.