தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரியின் முடியைப் பிடித்து இழுத்து, கல்வீசித் தாக்கிய கும்பல்

1 mins read
5f745209-f3f3-4cc5-8791-ef9b84388e72
-

பாட்னா: மணல் கடத்­தலைத் தடுக்க முயன்ற பெண் அதி­காரி தாக்­கப்­பட்ட சம்­ப­வம் பீகா­ரில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அதி­காரி தாக்­கப்­படும் காட்சி அடங்கிய காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வி­யதை அடுத்து குற்­ற­வா­ளி­கள் மீது கடும் நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுத்து வரு­கிறது.

பாட்னா அருகே உள்ள பிஹ்தா பகு­தி­யில் சட்­ட­விரோத மணல் குவாரி செயல்­பட்டு வரு­வ­தாக எழுந்த புகாரை அடுத்து அங்கு ஆய்வு நடத்த சுரங்கத் துறையைச் சேர்ந்த பெண் அதி­காரி ஒரு­வர் அங்கு சென்றார்.

அங்கு ஏரா­ள­மான லாரி­களில் மணல் கடத்­தப்­ப­டு­வ­தைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்த நிலை­யில், கடத்­தல்­கா­ரர்­கள் அவரை சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னர்.

பெண் அதி­கா­ரியைக் கீழே தள்ளி­விட்டு, அவ­ரது தலை­மு­டி­யைப் பிடித்து இழுத்­தார் ஒரு­வர். சிலர் அவர் மீது கற்­களை வீசி­யும் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

பெண் அதி­கா­ரி­யு­டன் சம்­பவ இடத்­துக்­குச் சென்ற இரண்டு ஆய்­வா­ளர்­களும் தாக்­கு­த­லுக்கு ஆளா­கி­னர்.

அப்­போது கடத்­தல்­கா­ரர் ஒருவர் கைப்பே­சி­யில் எடுத்த காணொளி­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. இதை­ய­டுத்து 44 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். மணல் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.