தரையிறங்கியபோது ஓடுதளத்தில் விமானத்தின் வால்பகுதி மோதியதால் நாக்பூரில் பரபரப்பு

தரையிறங்கியபோது ஓடுதளத்தில் விமானத்தின் வால்பகுதி மோதியதால் நாக்பூரில் பரபரப்பு

1 mins read
e198ba70-8912-4b6f-885f-19c33941eaf8
-

நாக்­பூர்: ஓடு தளத்­தில் தரை­யிறங்­கி­ய­போது தனி­யார் நிறு­வன விமா­னத்­தின் வால்­ப­குதி தரை­யில் மோதி­ய­தால் நாக்­பூர் விமான நிலை­யத்­தில் பர­ப­ரப்பு நில­வி­யது.

எனி­னும் இந்­தச் சம்­ப­வத்­தில் யாருக்­கும் எத்­த­கைய பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இண்­டிகோ விமான நிறு­வ­னத்­தின் விமா­னம் ஒன்று மும்பைக்கும் நாக்­பூ­ருக்­கும் இடையே இயக்­கப்­பட்­டது. எந்­தச் சிக்­க­லும் இன்றி நாக்பூர் வரை சென்ற அந்த விமா­னத்தை விமானி தரை­யி­றக்­கி­னார். அப்­போது எதிர்­பா­ராத வித­மாக விமா­னத்­தின் வால் பகுதி ஓடு­த­ளத்­தில் மோதி­யது.

இத­னால் பய­ணி­கள் அதிர்ச்சி அடைந்­த­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. எனி­னும் இந்த சம்­ப­வத்­தில் யாருக்­கும் பாதிப்போ அல்­லது காயங்­களோ ஏற்­ப­ட­வில்லை என இண்­டிகோ விமான நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அக்­கு­றிப்­பி்ட்ட விமா­னம் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­படும் என்­றும் ஏதே­னும் பழு­து­கள் இருப்­பின் அவை சரி­செய்­யப்­படும் என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.