புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் தொடர்பில் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க முடியும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்துக்கு நீதித்துறை தீர்ப்பால் முடிவு காண இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு குறிப்பிட்டது.
தன்பாலினத்தவர் திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டு பார்வை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

