விசாகப்பட்டினம் ஆந்திராவின் தலைநகரமாகச் செயல்படும்: ஜெகன்மோகன்

விசாகப்பட்டினம் ஆந்திராவின் தலைநகரமாகச் செயல்படும்: ஜெகன்மோகன்

1 mins read
a0633587-17ad-46b3-ac7d-539dc0b5d790
-

விஜ­ய­வாடா: வரும் செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து விசா­கப்­பட்­டி­னம் தலை­ந­க­ர­மா­கச் செயல்­படும் என்று ஆந்­திரா முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி அறி­வித்­துள்­ளார்.

ஆந்­திரா மாநி­லம் பிரிக்­கப்­பட்ட பிறகு ஆந்­தி­ரா­வில் ஆட்­சிக்கு வந்த தெலுங்கு தேசக் கட்சி விஜ­ய­வாடா அரு­கில் இருக்­கும் அம­ரா­வ­தியை ஆந்­தி­ரா­வின் தலை­ந­க­ராக அறி­வித்­தது.

இதை­ய­டுத்து மத்­திய அரசு நிதி­யு­த­வி­யு­டன் அம­ரா­வ­தி­யில் சட்­ட­மன்­றம், தலை­மைச் செய­ல­கம், அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ருக்­கான குடி­யி­ருப்­பு­களும் அமைக்­கப்­பட்­டன.

இந்த நிலை­யில் கடந்த தேர்­த­லில் ஆந்­தி­ரா­வில் ஆட்­சி­யைப் பிடித்த ஜெகன்­மோ­கன் ரெட்டி மாநி­லத்­தின் அனைத்­துப் பகு­தி­களும் மேம்­பட வேண்­டும் என்­ப­தால் சட்­ட­மன்­றத் தலை­ந­க­ராக அம­ரா­வ­தி­யும் நிர்­வா­கத் தலை­ந­க­ராக விசா­கப்­பட்­டி­ன­மும், நீதித்­துறை தலை­ந­க­ராக கர்­நூ­லும் இருக்­கும் என்று அறி­வித்­தார்.

ஆனால் முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்­டி­யின் அறி­விப்­புக்கு அம­ரா­வ­தி­யில் தலை­ந­க­ரம் அமைக்க சுமார் 31,000 ஏக்­கர் நிலத்தை கொடுத்த விவ­சா­யி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். அவர்­கள் போராட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர்.

தற்­போது இந்த விவ­கா­ரம் நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணை­யில் உள்­ளது.

இந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் ஸ்ரீகா­கு­ளத்­தில் நடை­பெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய ஜெகன்­மோ­கன் ரெட்டி, செப்­டம்­பர் மாதம் முதல் ஆந்­தி­ரா­வின் நிர்­வாக தலை­ந­க­ர­மாக விசா­கப்­பட்­டி­னம் செயல்­படும் என்று தெரி­வித்­துள்­ளார்.

முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யின் இந்த அறி­விப்­புக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலை­வர் சந்­தி­ர­பாபு நாயுடு, இனி­மேல் ஆளும் கட்­சி­யி­னர் இங்கு நில ஆக்­கி­ர­மிப்­பில் ஈடு­ப­டு­வார்­கள் என்று கூறி­யுள்­ளார்.