ஒரே நாளில் 12,591 பேருக்குத் தொற்று

ஒரே நாளில் 12,591 பேருக்குத் தொற்று

2 mins read
69c10925-00ca-46b9-9fe2-749fab6be5bb
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நேற்று காலை 8 மணி வரை­யி­லான நில­வ­ரப்­படி கடந்த 24 மணி நேரத்­தில் 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இது, எட்டு மாதங்­களில் இல்­லாத புதிய உச்­ச­மா­கும். மத்­திய சுகா­தார அமைச்சு நேற்று இந்த விவ­ரத்தை வெளி­யிட்­டது.

செவ்­வாய்க் கிழமை அன்று பாதிப்பு 7,633ஆக இருந்த நிலை­யில் மறு­நாள் புதன்­கி­ழமை 10,542ஆக உயர்ந்­தது.

இந்த நிலை­யில் நேற்று மேலும் அதி­க­ரித்து தின­சரிப் பாதிப்பு 12,000ஐத் தாண்­டி­யி­ருப்­பது கடந்த 8 மாதங்­களில் இதுவே முதல் முறை­.

தின­சரி பாதிப்பு விகி­தம் 5.46 விழுக்­கா­டா­க­வும் வாராந்­திர பாதிப்பு விகி­தம் 5.32 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது.

அதி­க­பட்­ச­மாக கேர­ளா­வில் 3,106 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. டெல்­லி­யில் ஒரே நாளில் 1,767 பேருக்குத் தொற்று உறு­தி­யா­னது.

அரி­யானா, மகா­ராஷ்­டிரா உட்­பட நான்கு மாநி­லங்­களில் பாதிப்பு ஆயி­ரத்தைத் தாண்டி உள்­ளது.

உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் 907 பேரும் தமிழ்­நாட்­டில் 542 பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே தமி­ழ­கம் உட்­பட எட்டு மாநி­லங்­களில் கொரோனா தொற்று அதி­க­ரித்­துள்­ள­தால் தேவை­யான தடுப்­பூ­சி­ களை இருப்­பில் வைத்­தி­ருக்க மாநில அர­சாங்­கங்­க­ளுக்கு மத்­திய அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அண்­மை­யில் பிர­த­ம­ரின் முதன்­மைச் செய­லர் பி.கே.மிஸ்ரா தலை­மை­யில் நடந்த கூட்­டத்­தில் நாட்­டின் சுகா­தார உள்­கட்­ட­மைப்பு, தள­வா­டங்­கள், மருந்­து­கள் போன்­றவை தயார் நிலை­யில் வைப்­பது மற்­றும் தடுப்­பூ­சி­யில் கவ­னம் செலுத்­து­வது ஆகி­யவை குறித்து விவா­திக்­கப்­பட்­டது.

பின்­னர் பேசிய பி.கே.மிஸ்ரா, உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து நேர­டி­யாகத் தேவை­யான கொரோனா தடுப்­பூ­சி­களைக் கொள்­மு­தல் செய்ய மாநில அர­சு­க­ளுக்­கும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.