வானூர்திகள் மூலம் கைதிகள் கண்காணிப்பு

வானூர்திகள் மூலம் கைதிகள் கண்காணிப்பு

1 mins read
61324c58-52a3-43af-bee0-f6a656fe2b1a
-

புனே: இந்­தி­யா­வில் சிறைப் பாது­காப்பு, கண்­கா­ணிப்பு வலுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

இதன் ஒரு பகு­தி­யாக உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்ள சிறை­க­ளின் பாது­காப்­புக்கு ஆளில்லா விமா­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக பாஜக ஆளும் மற்­றொரு மாநி­ல­மான மராட்­டி­யத்­தி­லும் இதே போன்று வானூர்­தி­க­ளைப் பயன்­ப­டுத்த மத்­திய உள்­துறை அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

உத்­த­ரப்பிர­தே­சத்­திற்கு பிறகு இந்த வச­தியை பெறும் 2வது மாநி­லம் மராட்­டி­யம்.

இது பற்றி விளக்­க­ம­ளித்த சிறைத் துறை­யின் ஏ.டி.ஜி.பி. அமி­தாப் குப்தா, சிறை­களில் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வகை­யில் ஆளில்லா விமா­னங்­களை பயன்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றார்.

"சிறை­களில் கைதி­க­ளின் நட­வ­டிக்­கை­கள் மற்­றும் அவர்­க­ளுக்கு என்­னென்ன நடக்­கின்­றன என்­பது பற்றி கண்­கா­ணிக்­கும் நோக்­கி­லும், அவர்­க­ளு­டைய பாது­காப்பை கவ­னத்­தில் கொண்­டும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது. வெவ்­வேறு சிறை­களில் பதற்­ற­முள்ள பகு­தி­களில் இவற்­றைக் கொண்டு கண்­கா­ணிக்­கும் பணி நடை­பெ­றும்.

இரவு நேரத்­தி­லும் செயல்­படும் திறன் வாய்ந்த கேம­ராக்­க­ளு­டன் அவை இயங்குவதால் கூடு­த­லாக கண்­கா­ணிப்பு மற்­றும் பாது­காப்பு பணி­களை மேற்­கொள்ள உத­வும் என்­று சிறைத் துறை அதிகாரி திரு அதிதாப் குப்தா மேலும் தெரிவித்தார்.