திருவனந்தபுரம்: கேரளாவில் கழிவறையில் உள்ள வாளிக்குள் போடப்பட்ட பச்சிளம் குழந்தையை அதிகாரிகள் உயிரோடு மீட்டு உள்ளனர்.
பத்தினம்திட்டா மாவட்டம் கோட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குச் சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
வீட்டிலேயே குழந்தையை பெற்ற அந்தப் பெண்ணுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது தனக்குப் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இப்போது ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவ மனைக்கு வந்ததாகவும் கூறினார்.
ஆனால் பெண்ணுடன் வந்த அவரது மூத்த மகன், தாயாருக்குப் பிறந்த குழந்தை கழிவறையில் வீசப்பட்டதாக மருத்துவர்களிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையடுத்து மருத்துவர்கள், குழந்தைகள் நல அலுவலருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது பெண்ணின் வீட்டு கழிவறையில் ஒரு வாளிக்குள் குழந்தை அழுது கொண்டிருந்தது.
அதிகாரிகள் வாளியோடு குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப் படுகிறது.
அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தது.
இதையடுத்து அந்த குழந்தையை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தத்து எடுத்துக்கொண்டது. இதற்கிடையே கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், "பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் கைவிடப்பட்ட குழந்தையைப் போராடி மீட்டு உயிர் பிழைக்க வைத்த மருத்துவர்களையும் காவல்துறையினரையும் பாராட்டுகிறேன் என்று சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட கருத்துப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இச்சம்பவத்தைக் காவல்துறை விசாரித்து வரு கிறது.

